தட்டார்மடம் அருகே ருசிகரம், கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குளித்து இளைப்பாறிய திருடன் கைது

தட்டார்மடம் அருகே ருசிகரம், கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குளித்து இளைப்பாறிய திருடன் கைது

Views : 105

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தை அடுத்த சாலைபுதூர் அம்மன் கோவில் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சித்திரை. இவரது மனைவி நீலா புஷ்பா ( வயது 60).இவர்களுக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர்.

அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்து விட்டதால் நீலா புஷ்பா மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் பனங்கிழங்குகள் வியாபாரம் செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் வியாபாரத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டி.எஸ்.பி. கென்னடி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பது தெரியவந்தது. மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

ஜெயக்குமார் பனங்கிழங்கு வாங்குவதற்கு நீலா புஷ்பா வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் தனியாக வசித்து வருவதையும், அங்கு நகை, பணம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

மேலும் வெயிலில் சென்றதால் களைத்த அவர் திருட சென்ற வீட்டில் வாளியில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த தண்ணீரீல் குளித்துள்ளதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து திருடிய நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.


JOIN IN TELEGRAM

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 3 weeks ago
நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய

நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு

Mar 28, 2024 - 4 weeks ago
நான் மத்திய அமைச்சராகும் வாய்ப்பைப் பறித்தவர் எடப்பாடி பழனிசாமி..! - ரவீந்திரநாத் எம்.பி தாக்கு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சிட்டிங் எம்.பி ரவீந்திரநாத் உடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேனி பழனிசெட்டிபட்டி அருகே செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ``தற்போதுள்ள காலகட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி ஆகிய தலைவர்கள் களத்தில் வெற்றி பெற்றால்தான், அ.தி.மு.க காப்பாற்றப்படும் என்பதால், இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை.


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத்

Apr 05, 2024 - 3 weeks ago
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..! - கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடிகை கங்கான ரனாவத் தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க கூட்டத்தில் பேசிய அவர்,``பா.ஜ.க மீதான என் அதீத விருப்பத்தைப் பார்த்து, மற்ற கட்சிகள் என்னைப் பயமுறுத்தத் தொடங்கினர். என் வீட்டைக் கூட சேதப்படுத்தினர்.

வரவிருக்கும்