நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்

நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல்

Views : 81

பாலிவுட்டில் "கனவுக்கன்னி" என்று அழைக்கப்பட்ட நடிகை ஹேமமாலினி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கினார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது, தொடர்ந்து 3-வது முறையாக மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் காண்கிறார். 75 வயது ஆனவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இல்லை என்ற எழுதப்படாத விதியை தளர்த்தி, 75 வயதான ஹேமமாலினிக்கு பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. சார்பில் மதுரா தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் நடிகை ஹேமமாலினி வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஹேமமாலினி மனு தாக்கல் செய்யும் போது அவருடன் அம்மாநில நீர் சக்தித்துறை மந்திரி ஸ்வதந்த்ரா தேவ் சிங் உடனிருந்தார்.வேட்புமனு தக்கல் செய்த பின்னர் ஹேமமாலினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரா தொகுதியின் வளர்ச்சிக்காக மூன்றாவது முறையாக இங்கு வந்துள்ளேன். மீதமுள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிப்பேன். மேலும் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால் மதுராவில் உள்ள யமுனா நதியை சுத்தப்படுத்தும் பணியை முடிப்பதும், 84 கோசி பரிக்ரமா பாதை மற்றும் ரெயில் பாதை அமைப்பது ஆகிய முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. நாளை (5ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.


JOIN IN TELEGRAM

ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி!

May 09, 2024 - 1 week ago
ராமரை மோடி பார்த்தாரா? பரூக் அப்துல்லா பரபரப்பு கேள்வி! காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

Apr 25, 2024 - 3 weeks ago
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

May 06, 2024 - 1 week ago
இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது.

தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை