POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

இந்திய பிளேயிங் லெவனில் துபே எதுக்கு? ஸ்ரீசாந்த் ஆதங்கம்

1 year ago 15 ஜூன் 2024 08:09 AM | views : 198
இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற லீக் சுற்றில் அயர்லாந்தை முதல் போட்டியில் வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா கடைசிப் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் சிவம் துபே எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2024 தொடரில் கடைசிக்கட்ட போட்டிகளில் சொதப்பிய அவர் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அந்த வரிசையில் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 3 (9) ரன்களுக்கு அவுட்டாகி பின்னடைவு ஏற்படுத்தினார்.


அதை விட அப்போட்டியில் முகமது ரிஸ்வான் கொடுத்த எளிதான கேட்சை கோட்டை விட்ட அவர் இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்க தெரிந்தார். நல்லவேளையாக பும்ரா மற்றும் இதர பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இதுவரை சிவம் துபே பவுலிங் செய்யவில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

எனவே பேட்டிங்கிலும் தடுமாறும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டுமென ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம். அவர்களை மாற்றுவதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அக்சர் பட்டேல் நன்றாக பந்து வீசுகிறார். இருப்பினும் சிவம் துபே முதல் 2 போட்டிகளில் நன்றாக செயல்படவில்லை”

“பேட்டிங்கில் அவர் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்திய அணியில் நான் ஒரு மாற்றத்தை பார்க்க விரும்புகிறேன் சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவேண்டும். ஒருவேளை சிவம் துபே பந்து வீசவில்லையெனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் எந்தளவுக்கு நன்றாக செயல்படுவார் என்பது நமக்குத் தெரியும். மற்றொரு நாளில் அவரிடம் நான் பேசினேன். அவர் வாய்ப்புக்காக பசியுடன் காத்திருக்கிறார்”


“நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் விக்கெட் கீப்பிங் தவிர்த்து சூப்பர்மேன் போல ஃபீல்டிங் செய்யக் கூடியவர். எனவே பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் மிடில் ஆர்டரில் அவர் விளையாடலாம் என்று நான் கருதுகிறேன். சேசிங் செய்யும் போது போட்டியை ஃபினிஷிங் செய்வதற்கு நம்மிடம் சேஸ் மாஸ்டர் விராட் கோலி இருக்கிறார்” என்று கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் அதிமுக VIJAY சென்னை பாஜக CHENNAI அண்ணாமலை BJP ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK PMK TTV DHINAKARAN பாமக காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் உதயநிதி ஸ்டாலின் கனமழை திருமாவளவன் இந்திய அணி கோவை CONGRESS தமிழகம் சீமான் COIMBATORE கைது ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி அமமுக கொலை PARLIAMENT ELECTION KEERTHY SURESH UDHAYANIDHI STALIN THIRUMAVALAVAN தேவர் வன்னியர் OPS INDIAN CRICKET TEAM கொரோனா தென்காசி மதுரை TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை சூர்யா தமிழ்நாடு AJITH SURIYA நெல்லை ஓபிஎஸ் NELLAI பாலியல் தொல்லை அன்புமணி மோடி BIGG BOSS TAMIL ELECTION COMMISSION விடுமுறை CSK ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் அஜித் திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி