இந்திய பிளேயிங் லெவனில் துபே எதுக்கு? ஸ்ரீசாந்த் ஆதங்கம்

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூன் 15, 2024 சனி || views : 273

இந்திய பிளேயிங் லெவனில் துபே எதுக்கு? ஸ்ரீசாந்த் ஆதங்கம்

இந்திய பிளேயிங் லெவனில் துபே எதுக்கு? ஸ்ரீசாந்த் ஆதங்கம்

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற லீக் சுற்றில் அயர்லாந்தை முதல் போட்டியில் வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா கடைசிப் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் சிவம் துபே எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2024 தொடரில் கடைசிக்கட்ட போட்டிகளில் சொதப்பிய அவர் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அந்த வரிசையில் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 3 (9) ரன்களுக்கு அவுட்டாகி பின்னடைவு ஏற்படுத்தினார்.


அதை விட அப்போட்டியில் முகமது ரிஸ்வான் கொடுத்த எளிதான கேட்சை கோட்டை விட்ட அவர் இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்க தெரிந்தார். நல்லவேளையாக பும்ரா மற்றும் இதர பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் இதுவரை சிவம் துபே பவுலிங் செய்யவில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

எனவே பேட்டிங்கிலும் தடுமாறும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டுமென ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம். அவர்களை மாற்றுவதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அக்சர் பட்டேல் நன்றாக பந்து வீசுகிறார். இருப்பினும் சிவம் துபே முதல் 2 போட்டிகளில் நன்றாக செயல்படவில்லை”

“பேட்டிங்கில் அவர் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்திய அணியில் நான் ஒரு மாற்றத்தை பார்க்க விரும்புகிறேன் சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவேண்டும். ஒருவேளை சிவம் துபே பந்து வீசவில்லையெனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் எந்தளவுக்கு நன்றாக செயல்படுவார் என்பது நமக்குத் தெரியும். மற்றொரு நாளில் அவரிடம் நான் பேசினேன். அவர் வாய்ப்புக்காக பசியுடன் காத்திருக்கிறார்”


“நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் விக்கெட் கீப்பிங் தவிர்த்து சூப்பர்மேன் போல ஃபீல்டிங் செய்யக் கூடியவர். எனவே பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் மிடில் ஆர்டரில் அவர் விளையாடலாம் என்று நான் கருதுகிறேன். சேசிங் செய்யும் போது போட்டியை ஃபினிஷிங் செய்வதற்கு நம்மிடம் சேஸ் மாஸ்டர் விராட் கோலி இருக்கிறார்” என்று கூறினார்.

2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை INDIAN CRICKET TEAM SANJU SAMSON FANS SHIVAM DUBE SREESANTH சஞ்சு சாம்சன் சிவம் துபே ஸ்ரீசாந்த்
Whatsaap Channel
விடுகதை :

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


விடுகதை :

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?


விடுகதை :

இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?


37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய

7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

7  சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?


டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next