உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 25ஆம் தேதி செயின் வின்சென்ட் நகரில் நடைபெற்ற கடைசி சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 115/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ரஹமனுல்லா குர்பாஸ் 45 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து மழையால் 19 ஓவரில் 114 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய வங்கதேசம் சுமாராக பேட்டிங் செய்து 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 54* ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், நவீன் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் முதல் முறையாக ஐசிசி தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் புதிய சாதனை படைத்தது. முன்னதாக இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது.
குறிப்பாக 12வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக ஃபெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.
அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று ட்விட்டரில் கலாய்த்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை நடுவர்களுக்கு காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் போட்டி முடிந்ததும் அவர் தான் முதல் ஆளாக வெறித்தனமாக ஓடி வந்து ஆப்கானிஸ்தானின் வரலாற்று வெற்றியை கொண்டாட்டினார். அதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கலாம் போல என்று கிண்டலடிப்பதுடன் நாட்டுக்காக இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர்.
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!