ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
செயின் வின்சென்ட் நகரில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 92 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சத்தமில்லாத சாதனை:
முன்னதாக இந்த தொடரில் வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருவதை அனைவரும் அறிவோம். அதே போல இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் அர்ஷ்தீப் சிங்கும் அவருக்கு நிகராக அசத்தி வருகிறார். சொல்லப்போனால் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ராவை விட இதுவரை அர்ஷ்தீப் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் ஆர்பி சிங் 12 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்தப் பட்டியலில் தற்போது 3வது இடத்தில் 2014இல் 11 விக்கெட்டுகள் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வினும் மற்றும் 2024இல் 11* விக்கெட்டுகள் எடுத்துள்ள ஜஸ்ப்ரித் பும்ராவும் உள்ளனர்.
இது போக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையிலும் அர்ஷ்தீப் சிங் 10 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அதன் வாயிலாக 2 வெவ்வேறு டி20 உலகக் கோப்பைகளில் 10 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த வகையில் சத்தமின்றி தமக்கு கொடுக்கப்பட்ட வேலையில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு சாதனைகளையும் படைத்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து இந்தியா செமி ஃபைனல் சுற்றில் ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு கயானா நகரில் நடைபெறும் 2வது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!