ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் பட்டேல் 47, துபே 27 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசின் 52 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ரோஹித் பாராட்டு:
அதனால் தோனிக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா சாதனை படைத்தார். இந்நிலையில் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி பற்றி யாரும் எப்போதும் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் ரோஹித் சர்மா கடினமான நேரங்களில் பும்ரா செய்யும் அனைத்துமே மாஸ்டர் கிளாஸ் என்று பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 3 – 4 வருடங்களாக நாங்கள் என்ன செய்தோம் என்பதை விளக்குவது கடினம். அணியாகவும் தனி நபர்களாகவும் களத்திற்கு பின்னே நிறைய விஷயங்கள் நடந்தது. அதுவே இன்று வெற்றியை கொடுத்தது. இதை இன்று ஒரு நாளில் பெறவில்லை. கடந்த 3 – 4 வருடங்களாக கடினமாக உழைத்தோம். கடந்த காலங்களில் மிகவும் அழுத்தமான போட்டிகளில் விளையாடிய நாங்கள் தோல்வியை சந்தித்த பக்கத்தில் இருந்தோம்”
“ஆனால் அதை புரிந்து கொண்ட எங்கள் வீரர்கள் தேவைக்கு நிகராக செயல்பட்டது இன்று ஒரு எடுத்துக்காட்டு. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா வெல்வது போல் இருந்தாலும் எங்கள் வீரர்கள் போராடி வெற்றியை கொண்டு வந்தனர். இதற்கான பாராட்டு அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் செல்லும். விராட் கோலியின் ஃபார்ம் பற்றி யாரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பக் கூடாது”
“இன்று ஒருபுறம் அவர் நின்றது தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. நீண்ட காலம் விளையாடும் அவர் இன்றும் மாஸ்டர் கிளாஸ் செய்தார். அற்புதமாக விளையாடிய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை அபாரமாக வீசினார். ஒவ்வொரு முறையும் பும்ரா மேஜைக்கை எடுத்து வருவது மாஸ்டர் கிளாஸ். நியூயார்க் முதல் பார்படாஸ் வரை எங்களுடைய ரசிகர்கள் ஆதரவு அற்புதமாக இருந்தது”
“இந்தியாவில் தற்போது இரவாக இருக்கும். ஆனால் அங்கே ரசிகர்கள் எங்கள் வெற்றியை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் எங்களைப் போலவே அவர்களும் இதற்காக நீண்ட காலம் காத்திருந்தனர்” என்று கூறினார்.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!