அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது ஜூலை 1-ஆம் தேதி துவங்கி ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
அதன்படி நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை செய்தது.
அந்த வெற்றியோடு இந்திய அணியை சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வினையும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக நியூசிலாந்து வீரர் பெர்குசன் நான்கு ஓவர்களையும் மெய்டன் ஓவராக வீசினார்.
ஒரு உலக கோப்பையில் இப்படி ஒரு வீரர் அசாத்தியமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது இதுவே முதல்முறை. மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அதிக பவுண்டரிகள் விளாசபட்டன. அதுமட்டுமின்றி ஒரே டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்ததும் இந்த உலகக்கோப்பையில் தான்.
அந்த வகையில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியிருந்த வீரராக இருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை சக அணியும் வீரரான பூரான் முறியடித்து இருந்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவு 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்ட தொடராக இந்த தொடர் மாறியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை துவங்கியதில் இருந்து இதுவரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக இந்த ஆண்டு மட்டும் தான் 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2012 ஆம் ஆண்டு 21 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!