ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பெற்ற இந்த வெற்றி அனைவராலும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஐந்தாவது போட்டியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் 40 ரன்களுக்கு எல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
இப்படி சிக்கலில் சிக்கிய இந்திய அணியை மீட்டெடுத்து அணியின் ஸ்கோரை கட்டமைக்க யாராவது ஒருவர் நிலைத்து விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான்காவது வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 58 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இப்படி இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் அடித்த நான்கு சிக்ஸர்கள் மூலம் முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோருடன் இணைந்து ஒரு முக்கியமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை 276 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 302 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மா 448 டி20 போட்டிகளில் விளையாடி 525 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி 399 டி20 போட்டியில் விளையாடி 416 சிக்ஸர்களையும், மகேந்திர சிங் தோனி 338 சிக்ஸர்களையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!