ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பெற்ற இந்த வெற்றி அனைவராலும் தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஐந்தாவது போட்டியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் 40 ரன்களுக்கு எல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
இப்படி சிக்கலில் சிக்கிய இந்திய அணியை மீட்டெடுத்து அணியின் ஸ்கோரை கட்டமைக்க யாராவது ஒருவர் நிலைத்து விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் நான்காவது வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி, நான்கு சிக்ஸர்கள் என 58 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இப்படி இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் அடித்த நான்கு சிக்ஸர்கள் மூலம் முக்கிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோருடன் இணைந்து ஒரு முக்கியமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையை தற்போது சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை 276 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 302 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ரோகித் சர்மா 448 டி20 போட்டிகளில் விளையாடி 525 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி 399 டி20 போட்டியில் விளையாடி 416 சிக்ஸர்களையும், மகேந்திர சிங் தோனி 338 சிக்ஸர்களையும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!