இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்கியது. தம்புலா நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் அதிரடியாக விளையாடினார்.
அந்த வகையில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்திய இந்த ஜோடி 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் சுப்மன் கில் 34 (16) ரன்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 40 (21) ரன்களும் விளாசி அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அதில் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி நிலையில் எதிர்புறம் தம்முடைய ஸ்டைலில் அதிரடி காட்டிய சூரியகுமார் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினார். அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 58 (26) ரன்களை விளாசினார். அப்போது அவரை அவுட்டாக்கிய பதிரனா அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியாவையும் 9 (10) ரன்களில் காலி செய்தார்.
அந்த நிலையில் ரிசப் பண்ட் மறுபிறம் அதிரடியாக விளையாடிய அரை சதத்தை நெருங்கினார். எதிர்புறம் வந்த ரியான் பராக்கை 7 ரன்களில் காலி செய்த பதிரனா மறுபுறம் அசத்திய ரிஷப் பண்டை 49 (33) ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை மண்ணில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் 1 ரன்னில் தவற விட்டார்.
ஏனெனில் இதுவரை இலங்கை மண்ணில் டி20 கிரிக்கெட்டில் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் அரை சதமடித்ததில்லை. இறுதியில் அக்சர் படேல் 10* ரன்கள் ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் இந்தியா 213/7 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் இலங்கை விளையாடி வருகிறது. இருப்பினும் இப்படி நடைபெறும் மைதானத்தில் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளை அதிக டி20 போட்டிகளில் வென்றுள்ளது. எனவே அதை பயன்படுத்தி இந்திய பவுலர்கள் வெற்றிக்காக போராடுகிறார்கள்.
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!