இதை செஞ்சா மட்டுமே பாண்டியா கம்பேக் கொடுக்க முடியும்.. சாஸ்திரி அட்வைஸ்

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூலை 29, 2024 திங்கள் || views : 211

இதை செஞ்சா மட்டுமே பாண்டியா கம்பேக் கொடுக்க முடியும்.. சாஸ்திரி அட்வைஸ்

இதை செஞ்சா மட்டுமே பாண்டியா கம்பேக் கொடுக்க முடியும்.. சாஸ்திரி அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா நிறைய மேடு பள்ளங்களை சந்தித்து வருகிறார். 2016இல் அறிமுகமாகி 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்திய அவர் கபில் தேவுக்கு பின் நல்ல ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக தவிர்த்து வரும் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவதில்லை.

அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டியா ஃபிட்டாக இல்லை என்று கருதும் புதிய பயிற்சியாளர் கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்துள்ளார்.


அத்துடன் துணை கேப்டன்ஷிப் பதவியையும் பறித்துள்ள தேர்வுக்குழு அடுத்து நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரிலும் பாண்டியாவை நீக்கியுள்ளது. இந்நிலையில் ஃபிட்டாக இல்லாத காரணத்தால் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்கள் முழுமையாக வீசுவதில்லை என்று ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார். எனவே மீண்டும் ஃபிட்டாகி 10 ஓவர்கள் முழுமையாக வீசினால் இதே தேர்வுக்குழு 2025 சாம்பியன் ட்ராபியில் பாண்டியாவை தேர்ந்தெடுக்கும் என்று சாஸ்திரி கூறியுள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாண்டியா தொடர்ந்து விளையாடுவது மிகவும் முக்கியம். மேட்ச் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம் என்று நான் நம்புவேன். எனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து முடிந்தளவுக்கு விளையாட வேண்டும். நாம் வலுவாக ஃபிட்டாக இருக்கிறோம் என்று நினைத்தால் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் வரலாம்”

“ஆனால் அதற்கு பவுலிங் முக்கியமாகும். 10 ஓவர்கள் வீச வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் மூன்று ஓவர்கள் மட்டும் வீசினால் அது அணியின் சமநிலையை பாதிக்கும். எனவே 8 – 10 ஓவர்கள் வீசி தம்முடைய வழியில் பேட்டிங் செய்தால் மீண்டும் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியும். எனவே இவை அனைத்தும் ஹர்திக் பாண்டியாவின் பயணத்தில் உள்ளது”


“ஏனெனில் அவருக்குத் தான் மற்றவர்களை விட தம்முடைய உடலைப் பற்றி நன்றாக தெரியும். மேலும் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றிய விதம் அவருக்கு உத்வேகத்தை கொடுக்கும். எனவே மீண்டும் ஃபிட்டாகி மேலே வர அவருக்கு எந்த உத்வேகமும் தேவையில்லை” என்று கூறினார்.

ALL ROUNDER FITNESS GAUTAM GAMBHIR HARDIK PANDYA INDIAN CRICKET TEAM RAVI SHASTRI இந்திய அணி ரவி சாஸ்திரி ஹர்டிக் பாண்டியா
Whatsaap Channel
விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


விடுகதை :

முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?


37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய

7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

7  சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்

கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்

கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்


செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next