Tamil News & polling
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே அடம் பிடிக்க துவங்கியுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் அந்நாட்டுக்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது.
அந்த வரிசையில் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி பெற்றது. எனவே இம்முறையும் பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதால் தங்களின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கை நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த சூழ்நிலையில் வாசிம் அக்ரம், சாகித் அப்ரிடி, சோயப் மாலிக், யூனிஸ் கான் உள்ளிட்ட பல முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் வீரர்களும் சிங்கத்தைப் போன்ற தைரியத்தை கொன்றவர்கள் என முன்னாள் வீரர் தன்வீர் அஹ்மத் தெரிவித்துள்ளார். அதனாலேயே இந்தியாவுக்கு சென்று 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே அதே போன்ற தைரியம் இருந்தால் இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் நாங்கள் முழு பாதுகாப்பை கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் தன்வீர் அஹ்மத் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சிங்கங்கள். அதனாலேயே நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்து கிரிக்கெட்டில் விளையாடினோம்”
“அதே போல நீங்களும் இங்கே வந்து தைரியத்தை காட்டுங்கள். நாங்கள் எங்கள் நாட்டுக்கு வந்து விளையாட உங்களை வரவேற்கிறோம். நாங்கள் உங்களுக்கு போதுமான பாதுகாப்பு உட்பட அனைத்தையும் கொடுப்போம். எங்கள் நாட்டுக்கு ஒரு முறை வாருங்கள். இருப்பினும் இதைப் பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர்”
“பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே வெற்றி தோல்வியை பார்க்காமல் எப்படி விளையாடுகிறோம் என்பதை சிந்திக்காமல் அனைத்து இடங்களிலும் சென்று விளையாடுகின்றனர். அந்த வகையில் இந்தியாவிற்கு சென்று விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் வந்தனர். இதைத் தான் நீங்கள் தைரியமான அணி தைரியமான வீரர்கள் என்று சொல்வீர்கள்” எனக் கூறினார். ஆனாலும் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடக்கூடாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு
கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு
ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக
விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்