இந்தியாவுக்கு தைரியம் இருந்தா இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும்... தன்வீர் அஹ்மத்

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூலை 29, 2024 திங்கள் || views : 332

இந்தியாவுக்கு தைரியம் இருந்தா இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும்... தன்வீர் அஹ்மத்

இந்தியாவுக்கு தைரியம் இருந்தா இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும்... தன்வீர் அஹ்மத்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே அடம் பிடிக்க துவங்கியுள்ளது. ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் அந்நாட்டுக்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் மோதி வருகிறது.

அந்த வரிசையில் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று அந்த தொடரில் விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி பெற்றது. எனவே இம்முறையும் பாதுகாப்பு பிரச்சினை காணப்படுவதால் தங்களின் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கை நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த சூழ்நிலையில் வாசிம் அக்ரம், சாகித் அப்ரிடி, சோயப் மாலிக், யூனிஸ் கான் உள்ளிட்ட பல முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்கள் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் வீரர்களும் சிங்கத்தைப் போன்ற தைரியத்தை கொன்றவர்கள் என முன்னாள் வீரர் தன்வீர் அஹ்மத் தெரிவித்துள்ளார். அதனாலேயே இந்தியாவுக்கு சென்று 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அதே போன்ற தைரியம் இருந்தால் இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் நாங்கள் முழு பாதுகாப்பை கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் தன்வீர் அஹ்மத் பேசியது பின்வருமாறு. “நாங்கள் சிங்கங்கள். அதனாலேயே நாங்கள் உங்கள் நாட்டுக்கு வந்து கிரிக்கெட்டில் விளையாடினோம்”

“அதே போல நீங்களும் இங்கே வந்து தைரியத்தை காட்டுங்கள். நாங்கள் எங்கள் நாட்டுக்கு வந்து விளையாட உங்களை வரவேற்கிறோம். நாங்கள் உங்களுக்கு போதுமான பாதுகாப்பு உட்பட அனைத்தையும் கொடுப்போம். எங்கள் நாட்டுக்கு ஒரு முறை வாருங்கள். இருப்பினும் இதைப் பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வருகின்றனர்”


“பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே வெற்றி தோல்வியை பார்க்காமல் எப்படி விளையாடுகிறோம் என்பதை சிந்திக்காமல் அனைத்து இடங்களிலும் சென்று விளையாடுகின்றனர். அந்த வகையில் இந்தியாவிற்கு சென்று விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் வந்தனர். இதைத் தான் நீங்கள் தைரியமான அணி தைரியமான வீரர்கள் என்று சொல்வீர்கள்” எனக் கூறினார். ஆனாலும் பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடக்கூடாது என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

BCCI CHAMPIONS TROPHY IND VS PAK INDIAN CRICKET TEAM PAKISTAN TEAM PAKISTHAN CRICKET BOARD இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான்
Whatsaap Channel
விடுகதை :

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.


விடுகதை :

ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய

7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

7  சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?


டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next