இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மோதின. ஆனால் அந்தத் தொடரின் 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா 3 – 0 என்ற கணக்கில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்து கோப்பையை வென்றது. குறிப்பாக ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்தது.
பல்லக்கேல் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வாஷிங்டன் சுந்தர் 25, ரியான் பராக் 26, கில் 39 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.
மோசமான சாதனை:
அதிகபட்சமாக குசால் பெரேரா 46, குசால் மெண்டிஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார், ரிங்கு சிங், ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த வாஷிங்டன் சுந்தர் இலங்கையை ஆல் அவுட் செய்தார்.
அதன் பின் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். முன்னதாக அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே 34/5 என தடுமாறியதால் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் போராடிய இந்தியா 137 ரன்கள் அடித்து கடைசியில் சூப்பர் ஓவரில் வெற்றி கண்டது.
இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பின்பும் சூப்பர் ஓவரில் இந்தியா வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. அதாவது 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தும் கடைசியில் இந்தியா சூப்பர் ஓவரில் வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் முதல் தொடரிலேயே வென்ற இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.
மறுபுறம் முதலிரண்டு போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் சொதப்பிய இலங்கை கையில் வைத்திருந்த வெற்றியை கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு தாரை வார்த்தது என்றே சொல்லலாம். இதையும் சேர்த்து இலங்கை இதுவரை 105* தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளை பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை இலங்கை படைத்துள்ளது. இதற்கு முன் வங்கதேசம் 104 தோல்விகள் சந்தித்ததே முந்தைய சாதனையாகும்.
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்
அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!