INDIAN 7

Tamil News & polling

இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாமா?

14 ஆகஸ்ட் 2021 02:22 AM | views : 775
Nature

கொரோனாவைத் தடுப்பதற்கு இரு வேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவு என சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது ஏன் மற்றதைக் கலந்து சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இரு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான காலகட்டத்தை மத்திய அரசு நீட்டித்திருப்பதையும் அவர் விமர்சித்தார்.


இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சைரஸ் பூனவல்லா தெரிவித்துள்ளனர்.



இந்தியாவின் ஒரே உள்நாட்டு தடுப்பூசி கோவாக்ஸின்

கோவாக்ஸின் என்பது, இறந்த கொரோனாவைரஸ்களால் ஆன தடுப்பூசி. அது உடலுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்று சொல்லப்படுகிறது. ஒரு தடுப்பூசி போடப்படும்போது, கோவிட்-19 வைரஸை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அடையாளம் கண்டு, எதிரணுக்களை உருவாக்குகிறது.

கோவிஷீல்ட் தடுப்பூசி எப்படி செயல்படுகிறது?

இந்தியாவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிட்யூட்டால் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட்- ஆஸ்ட்ரா செனக்கா தடுப்பூசி இது. அடினோவைரஸின் மென் வடிவத்தை, கொரோனா வைரஸின் தோற்றத்தைப் பிரதிபலிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது கோவிஷீல்ட். இந்த மாற்றப்பட்ட வடிவம் உடலுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்று சொல்லப்படுகிறது. இது செயல்திறன் மிக்க தடுப்பூசி என்றும் பிரேசில் மற்றும் இங்கிலாந்தில் இதுபற்றி நடந்த மூன்றாம்கட்ட ஆராய்ச்சிகள் நம்பிக்கை தருகின்றன என்று சீரம் இன்ஸ்டிட்யூட் தெரிவிக்கிறது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்