Tamil News & polling
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து விளையாடிய வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிரை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து காலிறுதிச் சுற்றில் அல்பேனிய வீரர் அபாகரோஃபை எதிர்கொண்ட அமன் 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
அரையிறுதியில் ஜப்பான் வீரர் ரே ஹிகுச்சியுடன் மோதினார்.
இதில், ஆட்டம் தொடங்கிய இரண்டே நிமிடங்களில் அமன் 0-10 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அமன் ஷெராவத், போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த டேரியன் க்ரூஸுடன் விளையாடினார்.
இந்த ஆட்டத்தில் 13-5 என்ற கணக்கில் அமன் ஷெராவத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன் மூலம் இந்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் முதல் பதக்கமும் ஒட்டுமொத்தமாக 6-வது பதக்கம் கிடைத்துள்ளது.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி MK Stalin TTV Dhinakaran AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் Anbumani Ramadoss AMMK அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு சீமான் டிடிவி தினகரன் Thirumavalavan PMK முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan பாமக வடகிழக்கு பருவமழை Congress Edappadi Palaniswami சட்டசபை தேர்தல் Tamilaga Vettri Kazhagam