POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

கம்பீர் வலுக்கட்டாயத்தால் துலீப் கோப்பையில் விளையாடும் விராட், ரோஹித்!

1 year ago 12 ஆகஸ்ட் 2024 07:36 AM | views : 222
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஒரு மாதம் இந்திய அணியினர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள 2024 துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் போதுமான அளவு அனுபவத்தை கொண்டுள்ளனர். அதனால் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முந்தைய பயிற்சியாளர்கள் அவர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட சொன்னதில்லை.


ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் அந்த நிலைமையை மாற்றியுள்ளார். ஆம் நிறைவு பெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் ஃபிட்டாக இருந்தால் கண்டிப்பாக விளையாடியாக வேண்டும் என்று சொன்ன கௌதம் கம்பீர் அவர்களை வலுக்கட்டாயமாக இலங்கை தொடரில் விளையாட வைத்தார்.

அதே சமயம் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமானவர் என்பதால் அவருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டதாக கம்பீர் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் 6 போட்டிகளைக் கொண்ட துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சென்னையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது. எனவே அதற்கு தயாராக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ துலீப் கோப்பையில் விளையாட வைக்க உள்ளது.

இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் அந்தத் தொடரில் விளையாட உள்ளன. அந்த 4 அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் போன்ற பெரும்பாலான நட்சத்திர இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். அந்த 4 அணிகளை தேர்வுக்கு குழுவினர் விரைவில் தேர்ந்தெடுத்து வெளியிடுவார்கள்.


மொத்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டுமே அந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். அந்த வகையில் நீண்ட காலம் கழித்து நட்சத்திர வீரர்கள் உள்ளூர் தொடரில் விளையாடப் போகும் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக CHENNAI சென்னை அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் PMK AIADMK MK STALIN பாமக கனமழை தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி அன்புமணி ராமதாஸ் கோவை UDHAYANIDHI STALIN COIMBATORE ரஜினிகாந்த் திருமாவளவன் முக ஸ்டாலின் காங்கிரஸ் CONGRESS தமிழகம் பிரதமர் மோடி கைது INDIAN CRICKET TEAM சீமான் தேவர் கொலை THIRUMAVALAVAN அமமுக சட்டசபை தேர்தல் OPS வடகிழக்கு பருவமழை வன்னியர் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI SURIYA மதுரை TAMIL ACTRESS AJITH PARLIAMENT ELECTION ஓபிஎஸ் NELLAI சூர்யா நெல்லை தென்காசி தமிழ்நாடு கீர்த்தி சுரேஷ் கொரோனா ELECTION COMMISSION அன்புமணி கள்ளக்காதல் ASSEMBLY ELECTIONS BIGG BOSS TAMIL பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் 2024 T20 WORLDCUP விடுமுறை தூத்துக்குடி TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI அஜித் CSK NORTHEAST MONSOON