கம்பீர் வலுக்கட்டாயத்தால் துலீப் கோப்பையில் விளையாடும் விராட், ரோஹித்!

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஆகஸ்ட் 12, 2024 திங்கள் || views : 237

கம்பீர் வலுக்கட்டாயத்தால் துலீப் கோப்பையில் விளையாடும் விராட், ரோஹித்!

கம்பீர் வலுக்கட்டாயத்தால் துலீப் கோப்பையில் விளையாடும் விராட், ரோஹித்!

இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஒரு மாதம் இந்திய அணியினர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள 2024 துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் போதுமான அளவு அனுபவத்தை கொண்டுள்ளனர். அதனால் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் போன்ற முந்தைய பயிற்சியாளர்கள் அவர்களை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட சொன்னதில்லை.


ஆனால் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் அந்த நிலைமையை மாற்றியுள்ளார். ஆம் நிறைவு பெற்ற இலங்கை ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் ஃபிட்டாக இருந்தால் கண்டிப்பாக விளையாடியாக வேண்டும் என்று சொன்ன கௌதம் கம்பீர் அவர்களை வலுக்கட்டாயமாக இலங்கை தொடரில் விளையாட வைத்தார்.

அதே சமயம் ஜஸ்ப்ரித் பும்ரா தனித்துவமானவர் என்பதால் அவருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டதாக கம்பீர் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் 6 போட்டிகளைக் கொண்ட துலீப் கோப்பை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி துவங்க உள்ளது. மறுபுறம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சென்னையில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது. எனவே அதற்கு தயாராக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ துலீப் கோப்பையில் விளையாட வைக்க உள்ளது.

இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய 4 அணிகள் அந்தத் தொடரில் விளையாட உள்ளன. அந்த 4 அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல், அக்சர் படேல், சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ் போன்ற பெரும்பாலான நட்சத்திர இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். அந்த 4 அணிகளை தேர்வுக்கு குழுவினர் விரைவில் தேர்ந்தெடுத்து வெளியிடுவார்கள்.


மொத்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மட்டுமே அந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர். அந்த வகையில் நீண்ட காலம் கழித்து நட்சத்திர வீரர்கள் உள்ளூர் தொடரில் விளையாடப் போகும் இந்த முடிவுக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

BCCI DULEEP TROPHY GAUTAM GAMBHIR INDIAN CRICKET TEAM ROHIT SHARMA VIRAT KOHLI இந்திய அணி ரோஹித் சர்மா விராட் கோலி
Whatsaap Channel
விடுகதை :

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?


விடுகதை :

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?


விடுகதை :

ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?


டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்


அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில்  வி.சி. சந்திரகுமார் போட்டி


சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை

சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next