கருணாநிதி உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயத்தை, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று, 10,000 ரூபாய் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 500 நாணயங்கள் விற்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாதம், 18ம் தேதி சென்னையில் வெளியிட்டார்.
கருணாநிதி உருவ நாணயம், தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில், தலா 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும், 500 நாணயங்கள், 50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.
அதேசமயம், கருணாநிதி மீது அன்பும் பாசமும் கொண்ட தொண்டர்கள், 100 ரூபாய் கொடுத்து நாணயம் வாங்க, வழிவகை செய்ய வேண்டும் என, கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, காதர்மொய்தீன், ஈஸ்வரன் போன்றவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில், அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி, நேற்று நாணயத்தை வழங்கினார்; இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் போன்றவர்கள் வெளியூரில் இருந்ததால், அவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் நாணயம் வழங்கப்பட உள்ளது.
அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அக்கட்சிக்கு தேர்தல் சின்னமாக பானை சின்னமும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!