POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

சிலிண்டர் பற்றாக்குறை அதிர்ச்சி: பெங்களூருவில் 40 சதவீத ஹோட்டல்கள் மூடல்

1 month ago 12 மார்ச் 2026 12:57 AM | views : 456
பெங்களூரு,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதுடன், மோதல் தொடர்ந்து வருகிறது. மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

மேலும் ஈரான் கடல் வழியாக அதாவது ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் பிற நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு செல்வது முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு இந்த வகையான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் உணவு தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டல், உணவகங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சிறு ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. சற்று பெரிய ஓட்டல்களில் கூடுதல் எண்ணிக்கையில் கியாஸ் சிலிண்டர்கள் இருக்கின்றன.

நேற்று முன்தினம் பெங்களூருவில் 20 சதவீத ஓட்டல்கள் கியாஸ் சிலிண்டர் கிடைக்காமல் மூடப்பட்டன. 2-வது நாளாக நேற்றும் பல ஓட்டல்கள், டீக்கடைகள், துரித உணவகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று மட்டும் 40 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூருவில் உள்ள 10 ஆயிரம் ஓட்டல்களும் மூடப்படும் அபாயம் உள்ளது. வணிக சிலிண்டர் பற்றாக்குறையால், தற்போது பெரும்பாலான ஓட்டல்களில் அரிசி சாதம், தோசை, இட்லி, சாம்பார் போன்ற முக்கியமான உணவு வகைகள் மட்டும் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன.

இதற்கிடையே போதிய இடவசதி உள்ள ஓட்டல்களில் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவுகளை தயாரிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சில அத்தியாவசியமான உணவுகளை மட்டும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK PMK UDHAYANIDHI STALIN பாமக கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் இந்திய அணி திருமாவளவன் காங்கிரஸ் கோவை COIMBATORE தமிழகம் சீமான் கைது CONGRESS PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI வன்னியர் கொலை OPS THIRUMAVALAVAN தேவர் பிரதமர் மோடி அமமுக KEERTHY SURESH தென்காசி தமிழ்நாடு சட்டசபை தேர்தல் AJITH SURIYA TAMIL ACTRESS நெல்லை வடகிழக்கு பருவமழை சூர்யா NELLAI மதுரை ஓபிஎஸ் பாலியல் தொல்லை கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் RAJINIKANTH TAMILAGA VETTRI KAZHAGAM தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி ELECTION COMMISSION BIGG BOSS TAMIL அன்புமணி கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி CSK அஜித் விடுமுறை கொரோனா