INDIAN 7

Tamil News & polling

வாழை பட கதைக்காக மாரி செல்வராஜ் தன்னிடம் உரிமை கோரவில்லை : எழுத்தர் சோ.தர்மன்

29 ஆகஸ்ட் 2024 02:54 PM | views : 750
Nature

நல்ல கதைதான்... வாழை கதை விவகாரம்;  சோ.தர்மனுக்கு சைலண்டாக பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்


கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான படம் வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.


படத்தை பார்த்த இயக்குநர்கள், பொதுமக்கள் என அனைவரும் படத்தை பாராட்டியே பேசியிருந்தனர். இயக்குநர் பாலா, நடிகர் சூரி ஆகியோர் மாரி செல்வராஜை கட்டிபிடித்து முத்தமிட்டு பாராட்டியது பெரிதும் பேசப்பட்டது.


இதனிடையே, வாழை திரைப்படம் தன்னுடைய சிறுவயதில் நடந்த சம்பவம் என்றும், வாழைத்தாரை சுமந்து சென்ற தனது சகோதரியின் நினைவாக இந்த படத்தை எடுத்ததாக கூறியிருந்தார்.


இந்த நிலையில், வாழை திரைப்படம், 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய சிறுகதையின் தொகுப்பு என்று சாகித்ய அகாடமி விருத  வென்ற எழுத்தாளர் சோ.தர்மன்  தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் நீர்ப்பழி எனும் சிறுகதையின் வாழையடி எனும் தொகுப்பில் இருந்து வாழை திரைப்படத்தில் வரும் பிரச்னைகளை கதையாக எழுதி இருப்பேன். நான் அச்சு ஊடகத்தில் எழுதிய கதையைத் தான், அவர் காட்சி ஊடகத்தில் வாழை எனும் திரைப்படமாக காட்சிப்படுத்தியுள்ளார். 


ஒரே பிரச்சனையை பல்வேறு வடிவங்களில் கையாண்டு உள்ளோம். என்னுடைய கதை வாழைப்படமாக வந்திருப்பது மகிழ்ச்சிதான். கதைக்காக மாரி செல்வராஜ் தன்னிடம் உரிமை கோரவும் இல்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை, எனக் குறிப்பிட்டிருந்தார்.


வாழை தனது சிறு வயது கதை என அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில், எழுத்தர் சோ. தர்மனின் இந்த பேச்சு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்தக் குற்றாச்சாட்டுக்கு மாரி செல்வராஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.


இந்த நிலையில், இது தன்னுடைய கதைதான் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக, இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.


அதில், "வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி, "எனக் குறிப்பிட்டிருந்தார்.

Like
1
    Dislike
1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image 1987-ல் நடக்கும் இந்த கதையில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், அவரது மறைவால் அதிர்ந்து போகிறார். அப்போது அவருக்கு பேரன் பிறக்கிறான். இதனால் தனது பேரன்தான் அடுத்த எம்.ஜி.ஆர். என்று எண்ணி, அவரை எம்.ஜி.ஆரின்

Image கன்னியாகுமரியில் உலகப் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தன்று தை அமாவாசை விழா கோலாகலமாகக் கொண்டடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு வருகிற 18-ந்தேதி

Image ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் மாவட்டம் நபசர் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 6ம் தேதி காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது மாணவியை

Image மதுரையை சேர்ந்தவர் தேவா என்ற ரித்தீஷ்(வயது 27). கூலித்தொழிலாளி. இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தார். இவரது மனைவி இந்திராணி(26). இவர்களுக்கு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்