நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் 11 நாள் ஆவணி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி இன்று நிறைவடைந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்று வருகிறது. 8ம் திருவிழாவான 30ம் தேதி இரவு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுவாமித்தோப்பு தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்ட வாகனம் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது. பக்தர்கள் வெற்றிலை பாக்கு, பழங்களை அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பதியின் வடக்கு வாசலில் தவக்கோலத்தில் வீற்றிருந்த அய்யா பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். விழா நிறைவு நாளான இன்று மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் காவி உடையணிந்து நெற்றியில் திருநாமம் தரித்து தலைப்பாகை அணிந்தவாறு ”அய்யா அரகர.... சிவசிவா” என பக்தி கோஷங்களை எழுப்பினர்.
தேரோட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் காளை வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
பழநி: அக்னி நட்சத்திர விழா இன்றுடன் (மே 21) நிறைவடைவதையொட்டி அதிகாலை முதலே திரளான பக்தர்கள் பழநி மலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் அக்னி நட்சத்திர விழா நடைபெறும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திர விழா மே
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!