நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீவிரவாத ஒழிப்புத் துறையில் அதிகாரியாக இருக்கும் காந்தி (விஜய்) பல தீவிரவாத சதிகளை முறியடிக்கும் சிறப்பு ஏஜெண்டாக இருக்கிறார். அப்படி, கென்யாவில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களை தன் குழுவுடன் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்) அழிக்கிறார். அதேநேரம், அமைதியான குடும்பத் தலைவனாக மனைவி (ஸ்னேகா), மகனுடன் வாழ்ந்து வருகிறார்.
எதிர்பாராத நிகழ்வுபோல், தாய்லாந்த்தில் இன்னொரு தீவிரவாத திட்டத்தை முறியடிக்கக் குடும்பத்துடன் செல்கிறார். அங்கு வேறு பிரச்னை வருகிறது. அது என்ன? என்பதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. தொடர்ந்து, தன்னைச் சுற்றி தொடர்பே இல்லாமல் நடக்கும் விசயங்களைச் செய்வது யாரென காந்தி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம்.
இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் ரசிகர்களுக்குப் பெரிய திரையனுவத்தைத் தர வேண்டுமென்பதில் உறுதிகாட்டியிருப்பது தெரிகிறது. வெறும் கமர்சியல் திரைப்படமாக மட்டுமே நின்றுவிடாமல் திரைக்கதையில் நான் லீனியர் பாணியின் மூலம் அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தில் வைக்க முயன்றிருக்கிறார். வயதான விஜய், இளவயது விஜய் என இதுவரை தமிழில் செய்யாத முயற்சியாகவே டீஏஜிங் தொழில்நுட்பத்தை அசத்தலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இனி தமிழில் உருவாகும் டீஏஜிங் படங்களுக்கு கோட் படமே முன்னோடியாக இருக்கப்போகிறது.
முக்கியமாக, இளவயது விஜய் கதாபாத்திரம். ஆனால், சிறுவயது விஜய்யை டிஏஜிங் என்கிற பெயரில் சொதப்பியிருக்கிறார்கள். .நடிகர் விஜய்யின் ரசிகர்களைப்போலவே நமக்கும் ஏன் தொடர்ந்து நடிக்கலாமே? என்கிற எண்ணமே தோன்றுகிறது. வசனமாகட்டும், கணவனாக, தந்தையாக என பல பரிணாமங்களிலும் அழகான நடிப்பை வழங்கியிருக்கிறார். எங்கும், சலிக்காத முகமாக இருப்பதுதான் அவரின் பலமாகவும் இருக்கிறது. தந்தை காந்திக்கும், மகனுக்கும் பெரிய வித்யாசங்களை விஜய் கொடுத்திருக்கிறார். ஆக்சன், நடிப்பு, நடனமென அனைத்து தரப்பிலும் குறையே வைக்காத நடிகராகவே இதிலும் தொடர்கிறார்.
ஆனால், சில வசனங்கள் அவரது நடிப்புக்கு எதிராக இருக்கின்றன.சண்டைக் காட்சிகளிலும் ஆக்சன் ஹீரோவாக கச்சிதமாகப் பொருந்துகிறார். குறிப்பாக, தாய்லாந்து கார் துரத்தல் மெட்ரோ ரயில் சண்டைக்காட்சி உள்ளிட்டவை நன்றாக இருந்தன.
நடிகர் விஜய்யை வைத்தே பல காட்சிகள் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், நடிகர்கள் பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், யோகிபாபு, பிரேம்ஜி ஆகியோருக்கும் முக்கியமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை, அவர்கள் சரியாகவே பயன்படுத்தியுள்ளனர். நயன்தாரா, த்ரிஷா போல் வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சினேகாவுக்கான வாய்ப்புகளைக் கொடுக்கலாம். இன்னும் அவரிடமிருக்கும் வசீகரம் விலகவில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் வெளியானபோது இல்லாத சுவாரஸ்யம் திரைப்படமாக பார்க்கும்போது ரசிக்க வைக்கின்றன.
குறிப்பாக, விசில் போடு மற்று மட்ட பாடல்கள். அதிரடியான பின்னணி இசைகள் காதைக் கிழிக்காமல் கதையொடு ஒன்றச் செய்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இன்றும் தனித்தே தெரிவதற்கு அவரது பாணி இசையமைப்பே காரணம் என்பதை கோட்டிலும் உணர முடிகிறது..முதல்பாதியில் முழுக்க கதை என்னவாக இருக்கும் என்பதிலிருக்கும் ஆர்வம், இரண்டாம் பாதியில் இல்லை. சஸ்பென்ஸ் காட்சிகள்கூட ஊகிக்கும்படியாகவே இருக்கின்றன. அடுத்தது என்ன என வெங்கட் பிரபு போன்ற இயக்குநர்கள் சிந்திக்க வைப்பார்கள் என்று படத்தைப் பார்த்தால் பல இடங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மூன்று மணி நேரத் திரைப்படத்தை சோர்வடையாமல் கொண்டு செல்வது சாதாரணமானது அல்ல. எங்காவது பொறுமையைச் சோதிக்கும் இடங்கள் இருக்கும். இப்படத்தில் பல இடங்கள் உள்ளன. கதையின் ஆர்வத்தில் சரியாகும் என நினைத்தால்... நினைக்க மட்டும்தான் முடிகிறது. சில வசனங்களும், நகைச்சுவையும் சலிப்பைத் தருகின்றன.சஸ்பென்ஸ் என நினைத்து இவர்கள் வைத்த காட்சியிலும் எந்த ஆர்வமும் எழவில்லை. சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. பிரபல நடிகை குத்தாட்டம் ஆடியிருக்கிறார். அதுதான் கைதட்டல்களைப் பெறுகிறது.
திரில்லர், டீஏஜிங் என படம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் இருந்தும் திரைக்கதையால் பல காட்சிகள் ரசிகர்களால் சுலபமாக ஊகிக்கக்கூடியவையாகவே இருக்கின்றன். ஒரே ஆறுதல், டீஏஜிங் விஜய்யும் அவரது கதாபாத்திர வடிவமைப்புமே.. முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன் அட்டகாசமான படமொன்றில் நடித்துவிட வேண்டும் என அனைவரும் நினைக்கக் கூடியதுதான். ஆனால், நடக்க வேண்டுமே? விஜய்க்கு அது கைகூடவில்லை. அவரது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், சிறந்த படங்களின் பட்டியலில் இல்லை. மொத்தத்தில் எப்படியிருக்கிறது? படத்தின் தயாரிப்பாளரே சொன்னதுபோல், படம் முடிந்து வெளிவருகையில் ‘என்னடா பண்ணி வச்சுருக்கீங்க?’ என பலரும் நினைப்பார்கள். முக்கியமாக, விஜய் ரசிகர்கள்!.
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் நேற்று மீண்டும் புறக்கணித்தார். அதன் எதிரொலியாக செங்கோட்டையனின் எம்எல்ஏ மற்றும் கட்சி பதவிகளை பறிக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்களால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். அன்று முதல் செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும்
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய் மாலை 5 மணியளவில் வருகை தந்தார். விஜய்யை காண அதிக அளவில் பொதுமக்கள்
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார். இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை
விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை ரத்து
மாமல்லபுரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், "தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த்
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 'கெட்அவுட்' கையெழுத்து இயக்கம் என்று வைக்கப்பட்டுள்ள பேனரில் த.வெ.க. தலைவர்
சென்னை, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 2-ம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது. தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. விழா அரங்கிற்குள் விஜய் காலை 10 மணியளவில் வருவார் என்று கூறப்படுகிறது.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!