பிரபல பாடகி சுசித்ரா, கேரள நடிகை ரீமா மற்றும் அவரது கணவர் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். அதில் கேரளாவை பொறுத்தவரை போதை பார்ட்டிகளை ரீமாவும் அவரது கணவரும் அடிக்கடி நடத்தி வருவதாகவும். அதில் இளம் நடிகைகள் பலரும் பங்கேற்று வருவதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
ஏற்கனவே இதுபோல பல சர்ச்சையான விஷயங்களை சுசித்ரா கூறியிருப்பது நாம் அறிந்ததே. அதிலும் தனது முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமாரும், பிரபல நடிகர் தனுஷும் ஓரினசேர்கையாளர்கள் என்றும். அவர்களை ஒன்றாக ஒரே அறையில் தான் பார்த்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில் தான் பிரபல மலையாள திரையுலக நடிகை ரீமா, அண்மையில் வெளியிட்ட ஒரு பதிவில் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல், நடிகை சுசித்ரா இது போன்ற விஷயங்களை பேசுவது முற்றிலும் தவறு. ஒரு தனி மனிதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதனால் இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
காவல்துறையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது, அது மட்டும் அல்லாமல் அவதூறு வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த பிரச்சினையே இன்னும் முடியாத நிலையில், கேரள திரையுலகின் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் என்று கூறி ஒரு பரபரப்பு தகவலை சுசித்ரா இப்பொழுது பேசியிருக்கிறார்.
கேரள உலகைப் பொறுத்தவரை மட்டும் அல்ல, தமிழக மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகர் தான் பகத் பாசில். அவரைப் பற்றி பேசிய சுசித்ரா, நடிகர் பகத்தை காலி பண்ண மம்மூட்டி மற்றும் மோகன்லால் போட்ட திட்டம் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிற ஹேமா கமிட்டி. அவரை மட்டும் அல்ல, மலையாள திரை உலகில் வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களை காலி பண்ண அந்த இருவரும் நினைத்து வருகிறார்கள். கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை பாவனாவுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு பழிவாங்கும் வண்ணம் இப்படி செய்யப்படுகிறது என்று அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S