ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு தலைமறைவானதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்,” என்று கூறியிருந்தார்.’
மேலும் மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகங்களிலும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மகாவிஷ்ணு.
ஆஸ்திரேலியாவில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியிருப்பதாவது: நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும். அப்படி ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன். இன்று மாலை ஒரு செய்தி பார்த்தேன். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பரம்பொருள் அலுவலகத்திலும் போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நான் ஆஸ்திரேலியாவிலேயே தங்கவேண்டும் என்று நினைத்தால் கூட எனக்கு இங்கு 3 வருடம் விசா கொடுத்துள்ளனர். நான் இங்கேயே இருக்க வேண்டும் என்றால் என்னால் எளிமையான 3 மாதங்கள் கூட தங்க முடியும். ஆஸ்திரேலிய அரசும் அதற்கு அனுமதிக்கிறது.
ஆனால் நாளை மதியம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறேன். காரணம் இந்தியாவின் சட்ட திட்டங்களை பெரிதும் மதிப்பவன் நான். அதன் அடிப்படையில், நாளை நான் வருகிறேன். அமைச்சர் அன்பில் மகேஷ் நிறைய பேசியிருந்தார். அவருடைய பேச்சில் கோபமும் சீற்றமும் இருந்ததை பார்க்கமுடிந்தது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு, தகுதி இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. நாளை சென்னை வந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கலாம் என்று இருக்கிறேன்” இவ்வாறு மகாவிஷ்ணு தெரிவித்தார்.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!