POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை - ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விளக்கம்

1 year ago 07 செப்டம்பர் 2024 12:14 AM | views : 229
ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு தலைமறைவானதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்,” என்று கூறியிருந்தார்.’

மேலும் மகாவிஷ்ணுவுக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகங்களிலும் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் மகாவிஷ்ணு.

ஆஸ்திரேலியாவில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியிருப்பதாவது: நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும். அப்படி ஓடி ஒளியும் அளவுக்கு நான் என்ன தவறாக பேசிவிட்டேன். இன்று மாலை ஒரு செய்தி பார்த்தேன். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பரம்பொருள் அலுவலகத்திலும் போலீஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


நான் ஆஸ்திரேலியாவிலேயே தங்கவேண்டும் என்று நினைத்தால் கூட எனக்கு இங்கு 3 வருடம் விசா கொடுத்துள்ளனர். நான் இங்கேயே இருக்க வேண்டும் என்றால் என்னால் எளிமையான 3 மாதங்கள் கூட தங்க முடியும். ஆஸ்திரேலிய அரசும் அதற்கு அனுமதிக்கிறது.

ஆனால் நாளை மதியம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்குகிறேன். காரணம் இந்தியாவின் சட்ட திட்டங்களை பெரிதும் மதிப்பவன் நான். அதன் அடிப்படையில், நாளை நான் வருகிறேன். அமைச்சர் அன்பில் மகேஷ் நிறைய பேசியிருந்தார். அவருடைய பேச்சில் கோபமும் சீற்றமும் இருந்ததை பார்க்கமுடிந்தது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு, தகுதி இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. நாளை சென்னை வந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கலாம் என்று இருக்கிறேன்” இவ்வாறு மகாவிஷ்ணு தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை CHENNAI சென்னை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி MK STALIN பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN TAMIL NADU PMK AIADMK மு.க.ஸ்டாலின் UDHAYANIDHI STALIN கனமழை பாமக தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் இந்திய அணி முக ஸ்டாலின் ரஜினிகாந்த் காங்கிரஸ் திருமாவளவன் கோவை PARLIAMENT ELECTION COIMBATORE கைது CONGRESS INDIAN CRICKET TEAM சீமான் தமிழகம் வன்னியர் KEERTHY SURESH THIRUMAVALAVAN அமமுக பிரதமர் மோடி OPS கொலை EDAPPADI PALANISWAMI தேவர் சூர்யா சட்டசபை தேர்தல் NELLAI TAMIL ACTRESS நெல்லை தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை தென்காசி AJITH SURIYA மதுரை ஓபிஎஸ் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் CSK ELECTION COMMISSION பாலியல் தொல்லை கொரோனா விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ் தீபாவளி TAMILAGA VETTRI KAZHAGAM RAJINIKANTH கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் அன்புமணி தூத்துக்குடி