கிறிஸ் கெய்ல், ரிஸ்வானின் சாதனைகளை நொறுக்கிய நிக்கோலஸ் பூரான்.. புதிய இரட்டை உலக சாதனை

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at செப்டம்பர் 28, 2024 சனி || views : 310

கிறிஸ் கெய்ல், ரிஸ்வானின் சாதனைகளை நொறுக்கிய நிக்கோலஸ் பூரான்.. புதிய இரட்டை உலக சாதனை

கிறிஸ் கெய்ல், ரிஸ்வானின் சாதனைகளை நொறுக்கிய நிக்கோலஸ் பூரான்.. புதிய இரட்டை உலக சாதனை

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 28வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 175-7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 27, கேசி கார்ட்டி 32, கேப்டன் கைரன் பொல்லார்ட் 42, ஆண்ட்ரே ரசல் 31 ரன்கள் எடுத்தனர். பார்படாஸ் அணிக்கு அதிகபட்சமாக மஹீஸ் தீக்சனா 3, நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின் 176 ரன்களை துரத்திய பார்படாஸ் அணி முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவர்களில் 145-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு டீ காக் 8, கேப்டன் ரோவ்மன் போவல் 18, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். டேவிட் மில்லர் 30, அலிக் அதனேஷ் 44 ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.

அதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ட்ரின்பாகோ அணிக்கு அதிகபட்சமாக ஆக்கில் ஹாசன், கிறிஸ் ஜோர்டான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக இப்போட்டியையும் சேர்த்து 2024ஆம் ஆண்டு விளையாடிய டி20 கிரிக்கெட்டில் நிக்கோலஸ் பூரான் 66 போட்டிகளில் 2059 ரன்களை 42.0 சராசரியில் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ளார்.

அதாவது சர்வதேசம், ஐபிஎல், தற்போதைய சிபிஎல் உட்பட 2024ஆம் ஆண்டு விளையாடிய டி20 கிரிக்கெட்டில் பூரான் 2059* ரன்களை குவித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் சாதனையை உடைத்துள்ள பூரான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2021 காலண்டர் வருடத்தில் முகமது ரிஸ்வான் 2036 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.


இது போக இந்த வருடம் நடைபெற்ற டி20 போட்டிகளில் மட்டும் அவர் 150 சிக்ஸர்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 150 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் நிக்கோலஸ் பூரான் படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 2015 காலண்டர் வருடத்தில் கிறிஸ் கெயில் 135

CHRIS GAYLE MOHAMMED RIZWAN MOST SIXES NICHOLAS POORAN WEST INDIES TEAM WORLD RECORD கிறிஸ் கெயில் நிக்கோலஸ் பூரான் முகமது ரிஸ்வான்
Whatsaap Channel
விடுகதை :

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


விடுகதை :

இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!

ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!


கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்


யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை

யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை


கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next