ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறினால் கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டன் யார்? – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at அக்டோபர் 23, 2024 புதன் || views : 194

ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறினால் கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டன் யார்? – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறினால் கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டன் யார்? – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடைசியாக கம்பீரின் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கொல்கத்தா அணியானது தற்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சி அளித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியானது தங்கள் அணியில் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை மூன்றாவது வீரராகவே தக்க வைக்க நினைக்கிறது.

அப்படி மூன்றாவது வீரராக தக்கவைக்கப்படும் அவருக்கு 11 கோடிக்கு மட்டுமே சம்பளமாக கொடுக்க நினைக்கிறது. கொல்கத்தா அணி சார்பாக முதலாவதாக ஆண்ட்ரே ரசலையும், இரண்டாவது வீரராக வருண் சக்கரவர்த்தியையும் அவர்கள் தக்கவைக்க நினைக்கிறார்கள். இதன் காரணமாக அதிகபட்ச சம்பளம் அவர்களுக்கு செல்லும்.

அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 11 கோடி மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. கேப்டன் பதவியில் இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவர் இப்படி ஒரு சம்பள குறைவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அப்படி ஏற்றுக்கொள்ளாமல் அவர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை வாங்க லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மாயங்க் யாதவிற்கு 14 கோடி – எதற்காக தெரியுமா?

இந்நிலையில் ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் அப்படி கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக கேப்டனாக நிதீஷ் ராணாவை நியமிக்க அந்த அணியின் நிர்வாகம் ஒரு திட்டத்தை வைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே நிதீஷ் ராணா ஏற்கனவே ஒரு சீசன் கொல்கத்தா அணியை வழிநடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL 2025 KKR KKR CAPTAIN NITISH RANA SHREYAS IYER ஐ.பி.எல் 2025 கே.கே.ஆர் கே.கே.ஆர் கேப்டன் நிதீஷ் ராணா ஷ்ரேயாஸ் ஐயர்
Whatsaap Channel
விடுகதை :

காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை அவன் யார்?


விடுகதை :

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


விடுகதை :

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?


அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநி மலையைச் சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்

 அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநி மலையைச் சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்


இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்

இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next