POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேறினால் கொல்கத்தா அணியின் அடுத்த கேப்டன் யார்? – நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

1 year ago 23 அக்டோபர் 2024 04:27 PM | views : 212
ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. கடைசியாக கம்பீரின் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கொல்கத்தா அணியானது தற்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு கழித்து சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது அந்த அணியின் நிர்வாகத்திற்கும் மகிழ்ச்சி அளித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணியானது தங்கள் அணியில் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை மூன்றாவது வீரராகவே தக்க வைக்க நினைக்கிறது.

அப்படி மூன்றாவது வீரராக தக்கவைக்கப்படும் அவருக்கு 11 கோடிக்கு மட்டுமே சம்பளமாக கொடுக்க நினைக்கிறது. கொல்கத்தா அணி சார்பாக முதலாவதாக ஆண்ட்ரே ரசலையும், இரண்டாவது வீரராக வருண் சக்கரவர்த்தியையும் அவர்கள் தக்கவைக்க நினைக்கிறார்கள். இதன் காரணமாக அதிகபட்ச சம்பளம் அவர்களுக்கு செல்லும்.

அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 11 கோடி மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. கேப்டன் பதவியில் இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவர் இப்படி ஒரு சம்பள குறைவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அப்படி ஏற்றுக்கொள்ளாமல் அவர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை வாங்க லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மாயங்க் யாதவிற்கு 14 கோடி – எதற்காக தெரியுமா?

இந்நிலையில் ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் அப்படி கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக கேப்டனாக நிதீஷ் ராணாவை நியமிக்க அந்த அணியின் நிர்வாகம் ஒரு திட்டத்தை வைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே நிதீஷ் ராணா ஏற்கனவே ஒரு சீசன் கொல்கத்தா அணியை வழிநடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI பாஜக BJP TVK ANNAMALAI AMMK ADMK உதயநிதி ஸ்டாலின் தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK UDHAYANIDHI STALIN பாமக கனமழை கோவை இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் COIMBATORE முக ஸ்டாலின் ரஜினிகாந்த் பிரதமர் மோடி தமிழகம் கைது INDIAN CRICKET TEAM AJITH CONGRESS திருமாவளவன் சீமான் சட்டசபை தேர்தல் அமமுக PARLIAMENT ELECTION தேவர் கொலை வன்னியர் OPS KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS சூர்யா தமிழ்நாடு SURIYA நெல்லை NELLAI தென்காசி மதுரை ஓபிஎஸ் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI தூத்துக்குடி NORTHEAST MONSOON CSK அஜித் அன்புமணி BIGG BOSS TAMIL விடுமுறை கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா கீர்த்தி சுரேஷ்