Tamil News & polling
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
உதயநிதி துணை முதல்வரானதில் விளையாட்டு துறையினரின் பங்கும் உண்டு. உதயநிதி பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு துறையும் வளர்ந்துள்ளது, அவரும் வளர்ந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் சிறப்பாக நடத்தி காட்டினோம். செஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளோம்.
வெளிநாட்டு வீரர்கள் தமிழக அரசை நிறைவாக பாராட்டினார்கள்.
விளையாட்டு துறை பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ஏராளமான உதவிகள் வழங்கப்படுகிறது.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு.
விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார் உதயநிதி.
உங்க பசங்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தா ஊக்கமளிங்க. அதுவே அவங்களுக்கு உற்சாகம் அளிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் Vijay Chennai சென்னை DMK TVK திமுக அண்ணாமலை தவெக Annamalai பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran MK Stalin AIADMK திருமாவளவன் AMMK சீமான் ADMK மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செங்கோட்டையன் Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் Thirumavalavan PMK முக ஸ்டாலின் Sengottaiyan Seeman வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam சட்டசபை தேர்தல் கைது வானிலை ஆய்வு மையம் பாமக Edappadi Palaniswami