மதுரையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றுதான். எங்கள் கட்சிதான் அதற்கான பதில்.
* கட்சியிலேயே தேசியமும் இருக்கிறது. திராவிடமும் இருக்கிறது. தமிழகமும் இருக்கிறது. அதை முற்போக்கு சிந்தனையோடு கொண்டு செல்வதுதான் தேசிய முற்போக்கு திராவிட கழகம்.
* தமிழை நேசித்தவர் நம்முடைய கேப்டன் என்று எல்லோருக்கும் தெரியும். எத்தனையோ படங்களில் நடித்தாலும் தமிழை தவிர மற்ற எந்த மொழிகளிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் கேப்டன்.
* 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று அத்தனை இடத்திலும் தமிழைப் பற்றி பேசியவர் கேப்டன்.
* தமிழைத் தவிர மாற்று மொழியை பேசாதவர் நமது கேப்டன் என்று அனைவருக்கும் தெரியும்.
* அன்னை மொழி காப்போம். அனைத்து மொழியையும் கற்போம் என்று தான் இளைஞர்களுக்கு கேப்டன் சொன்னார்.
* எனவே நிச்சயமாக தமிழ் தான் நமது தெய்வம், அன்னை, அதில் மாற்று கருத்து கிடையாது.
* எங்களைப் பொறுத்தவரை தேசியத்தில் தான் திராவிடம் இருக்கு திராவிடத்தில் தான் தமிழகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
* அது இன்றல்ல நேற்றல்ல நூற்றாண்டு காலமாக இருக்கின்ற விஷயம். இனிமேல் அதுபற்றி புதிய விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பது எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!