தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை திருத்தப்பட்ட நாட்காட்டியின்படி அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அரையாண்டு தேர்வுக்காக மாணவர்கள் தங்களை தயார் செய்து வந்தனர். இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் தென்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டிசம்பர் 21-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அண்மையில் அரையாண்டு தேர்வு பட்டியலை வெளியிடப்பட்டது.
இதன்படி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு டிசம்பர் 10-ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும், ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் பெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், முந்தைய அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறை (டிச.24-ஜன.01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!