வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பெய்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
பெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனிடையே, பெஞ்சல் புயல், கனமழை, வெள்ள பாதிப்புகளை சீரமமைக்க உடனடி நிவாரணமாக தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
மாநில பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு 994.80 கோடி ரூபாய் விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு ஆண்டில் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலக்களுக்கு ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மக்களுடன் மோடி அரசு தோளோடு தோள் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
அக்னி நட்சத்திர விழா நிறைவு: பழநி மலையைச் சுற்றி வந்து வழிபட்ட பக்தர்கள்
இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!