சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், தமிழகத்தில் எம்எம்பிவி வைரஸ் பரவலுக்கு மாநில சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், எச்எம்பிவி உருமாறப்பட்ட தொற்று ஏதும் இங்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எச்எம்பிவி புதிய வைரஸ் அல்ல, அதனால், மக்கள் பீதியடைய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
எச்எம்பிவி தொற்று தொடர்பாக நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு, வளர்ந்து வரும் எந்தவொரு சுகாதார சவாலுக்கும் உடனடியாக பதிலளிக்க தயாராக இருப்பதை உறுதி செய்வதில் நாடு விழிப்புடன் உள்ளது. இந்த தொற்றால் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
எச்எம்பிவி வைரஸ் புதிய வைரஸ் அல்ல என்று சுகாதார நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இது முதன்முதலில் 2001-ல் கண்டறியப்பட்டது மற்றும் அது உலகம் முழுவதும் பரவி வருகிறது. HMPV சுவாசத்தின் மூலம் காற்றில் பரவுகிறது.
இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர்காலத்தின் துவக்கத்தில் வைரஸ் அதிகமாக பரவுகிறது.
கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளும், குஜராத்தில் ஒரு குழந்தையும், தமிழகத்தில் இரண்டு குழந்தைகளும் எச்எம்பிவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!