சென்னை:
ஈரோடு கிழக்கு சட்டசபை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திடீரென இறந்ததால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது. முதலில் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் மறைவைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இளங்கோவனும் உடல்நலக்குறைவால் மறைந்ததால் மீண்டும் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்பது இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. தி.மு.க- காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி இதுபற்றி முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அப்போது அந்த கட்சிக்கு பா.ஜனதா ஆதரவளித்தது. பின்னர் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தனி அணி அமைத்து பா.ஜனதா போட்டியிட்டது. அந்த கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று இருந்தன. கடந்த 2021-ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த த.மா.கா. போட்டியிட்டது. அப்போது அக்கட்சி சார்பில் யுவராஜா போட்டியிட்டு 58,396 வாக்குகள் பெற்று இருந்தார். அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் பா.ஜனதா அல்லது அக்கூட்டணியில் உள்ள த.மா.கா இப்போது போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் 2021-ல் கோமதி போட்டியிட்டு 11,629 வாக்குகள் பெற்றார். பின்னர் 2023 இடைத்தேர்தலில் மேனகா போட்டியிட்டு 10,827 வாக்குகள் பெற்றார். இங்கு நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது உறுதி.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் ஒரு சில நாட்களில் விடை தெரிந்து விடும்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வருமாறு:-
திருமகன் ஈவெரா (காங்கிரஸ்)-67,300
யுவராஜா (த.மா.கா) - 58396
கோமதி (நாம் தமிழர் கட்சி)-11,629
ராஜகுமார் (மக்கள் நீதி மய்யம்) -10,005
முத்துக்குமரன் (அ.ம.மு.க.) -1204
2023 இடைத்தேர்தல் முடிவுகள்:
2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்.) -1,10,156.
2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -43,923.
3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10,827.
4. எஸ்.ஆனந்த் (தே.மு.தி.க.) -1,432.
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
பபிள்கம்-ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் யார் ?
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா?
ஈரோடு, ஈரோடு திண்டல் திருமலை கார்டன் வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவருடைய மகன் கவின்குமார் (வயது 25). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தல் அருகே வசித்து வந்த அவருடைய தாத்தா இறந்துவிட்டார். அதன் 3-ம் நாள் துக்க
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!