INDIAN 7

Tamil News & polling

பீகாரில் இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை - பிரதமர் மோடி

14 நவம்பர் 2025 03:23 PM | views : 191
Nature

புதுடெல்லி,

பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மக்களின் மனதை திருடியிருக்கிறோம். மாபெரும் வரலாற்று தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். வரலாற்று வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில் ஜே.பி. கர்பூரி தாகூரை வணங்குகிறேன். இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை. பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர். அவர்கள் முஸ்லீம், யாதவர்கள் கூட்டணியால் வெல்ல முயன்றார்கள், நாம் பெண்கள், இளைஞர்கள் வாக்குகளால் அவர்களை வீழ்த்தி உள்ளோம்.

பீகாரில் இனி ஒருபோதும் காட்டாட்சி வராது. காட்டாட்சியை ஒழிக்க MY பார்முலாவை உருவாக்கினேன். M என்றால் பெண்கள், Y என்றால் இளைஞர்கள். 2010-க்கு பின் என்.டி.ஏ -வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கூட்டணி தலைவர்களின் கடுமையான உழைப்பால் வெற்றி. பீகாரின் சாமானிய மக்களுக்கும் கூட்டணி தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

அனைத்து கட்சிகளும் எஸ்.ஐ.ஆர். க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பீகாரில் எஸ்.ஐ.ஆர்.க்கு இளைஞர்கள் வலிமை அளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி கணக்குகளை பீகார் மக்கள் துவம்சம் செய்தனர்.பீகாரில் முதல்முறையாக வன்முறையின்றி தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் எந்த தொலைநோக்கு சிந்தனையும் இல்லை.பல்வேறு மாநிலங்களில் காங். ஆட்சியில் இருந்து வெளியேறி வருகிறது.

ஜனநாயகத்திற்கு பிழையற்ற வாக்காளர் பட்டியல் அவசியம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அமைதியான தேர்தலை நடத்திய ஆணையம், அதன் ஊழியர்கள், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். நக்சலைட்டு பாதிப்பு அதிகமிருந்த பகுதிகளில் அச்சமின்றி மக்கள் வாக்களிக்க ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டு துப்பாக்கி ஆட்சி இனி பீகாரில் வரக்கூடாது என்று மக்கள் வாக்களித்துள்ளனர். மாபெரும் வரலாற்று தீர்ப்பை அளித்துள்ள பீகார். மக்கள் நலனுக்கு என்.டி.ஏ கூட்டணி பாடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பீகாரில் இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை - பிரதமர் மோடி1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா?

Image புதுடெல்லி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில்

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை அடிக்கடி

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது

Image திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாஸா, கெத்தா... இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்; அமைச்சர் எ.வ.வேலுவிடம் வேலையை ஒப்படைத்தால் கவலைப்படவே

Image அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்