INDIAN 7

Tamil News & polling

மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க வசதி.

15 டிசம்பர் 2025 02:19 AM | views : 85
Nature

சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதேபோல, சாலையில் பிச்சை எடுப்பவர்கள், வயதானவர்கள், வீடு இல்லாதவர்கள் இரவு நேரங்களில் மெரினா கடற்கரை மணற்பரப்பிலும், உட்புற சாலையின் ஒதுக்குப்புறங்களிலும் தூங்குவார்கள். இதனால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையிலேயே வீடு இல்லாதவர்களுக்கு இரவு நேர காப்பகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, மெரினா கடற்கரை அண்ணா சதுக்கம் அருகில் உள்ள காலியிடத்தில் 2 ஆயிரத்து 400 சதுர அடியில் புதிதாக இரவு நேர காப்பகத்தை மாநகராட்சி கட்டியுள்ளது.

ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த காப்பகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது காப்பகத்தை சுற்றி நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் தூங்கும் வீடு இல்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் பின்புறத்திலேயே இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் 80 பேர் வரையில் தங்க முடியும். இவர்களுக்கு பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவைகள் வழங்கப்படும். கழிவறை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காப்பக பராமரிப்பு பணியை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, காப்பகத்தில் தங்கும் நபர்களுக்கு இரவு நேர உணவை அம்மா உணவகம் மூலம் வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு இந்த காப்பகம் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மெரினாவில் இரவு நேர காப்பகம்: வீடற்றோர் தங்க வசதி.1

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்