INDIAN 7

Tamil News & polling

கடையநல்லூர் அருகே கோர விபத்து: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 6 பேர் உடல் நசுங்கி பலி!

By E7 Tamil 24 நவம்பர் 2025 06:12 AM
Nature

துரைச்சாமிபுரம் இடைகால் அருகே கோர விபத்து: பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் - 6 பேர் உடல் நசுங்கி பலி, 20 பேர் கவலைக்கிடம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள துரைச்சாமிபுரம் இடைகால் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இன்று அதிகாலை துரைச்சாமிபுரம் இடைகால் அருகே தென்காசி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், எதிரே வந்த பேருந்தும் துரைச்சாமிபுரம் இடைகால் அருகே உள்ள வளைவில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பக்கமும் அப்பளம் போல் நொறுங்கியது. பேருந்துகளில் பயணித்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடையநல்லூர் மற்றும் சுரண்டை காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்துகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த படுகாயமடைந்த பயணிகளை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.



விபத்து காரணமாக தென்காசி கடையநல்லூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image ராஞ்சி, மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் இருந்து நேற்று மதியம் 12.50 மணியளவில் ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜசிதி ரெயில் நிலையத்திற்கு ஒரு

Image தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததையொட்டி



Whatsaap Channel


டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான்


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை


ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக சென்னை அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் கனமழை Chennai Annamalai திருமாவளவன் MK Stalin ADMK பாஜக Tamil Nadu Thirumavalavan தவெக மாநாடு சீமான் AIADMK எடப்பாடி பழனிசாமி BJP முக ஸ்டாலின் இந்திய அணி TTV Dhinakaran வடகிழக்கு பருவமழை தமிழக வெற்றிக்கழகம் indian cricket team AMMK TVK Conference வானிலை ஆய்வு மையம் செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam Seeman தமிழ்நாடு Northeast Monsoon தீபாவளி மு.க.ஸ்டாலின் Sengottaiyan PMK Rain அன்புமணி ராமதாஸ் மழை Anbumani Ramadoss காங்கிரஸ் பிரதமர் மோடி தவெக விஜய் VCK நயினார் நாகேந்திரன் பாமக தென்காசி Thoothukudi Congress உதயநிதி ஸ்டாலின் TVK Vijay Tirunelveli தமிழகம் வானிலை திருச்செந்தூர் விடுமுறை பாலியல் தொல்லை GetOut Stalin IMD அமரன் விசிக Edappadi Palaniswami நடிகை கஸ்தூரி மதுரை டிடிவி தினகரன் கைது GetOut Modi rain தனுஷ் Ind vs Nz Ajith திமுக அரசு Washington Sundar கோலிவுட் வாஷிங்டன் சுந்தர் தூத்துக்குடி Heavy Rain சட்டசபை தேர்தல் M.K. Stalin திருநெல்வேலி இந்தியா Nainar Nagendran