POLLING 📊 TN ELECTION 2026

 

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு

3 months ago 23 டிசம்பர் 2025 05:29 AM | views : 245
சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், புத்தாண்டில் பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதிமுக பொதுச் செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.

பொதுமக்கள் மத்தியிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.4 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருட்கள் என்னென்ன, அதற்கு எவ்வளவு செலவு ஏற்படும், கூடுதலாக ரொக்கப் பணம் எவ்வளவு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இதில், அரிசி அட்டைதாரர்கள் 1 கோடியே 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் கிடைக்கும். ஜனவரி முதல் வாரத்தில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கப் பணமும் விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் VIJAY அதிமுக சென்னை பாஜக CHENNAI BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN ADMK AIADMK ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாமக முக ஸ்டாலின் தமிழகம் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் கைது CONGRESS கனமழை காங்கிரஸ் திருமாவளவன் இந்திய அணி UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் தமிழ்நாடு கொலை கோவை சீமான் PARLIAMENT ELECTION அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM THIRUMAVALAVAN EDAPPADI PALANISWAMI COIMBATORE வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH தீபாவளி AJITH நெல்லை TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் ASSEMBLY ELECTIONS NELLAI தென்காசி கொரோனா நடிகை டிரெண்டிங் OPS டாப் நியூஸ் PRIME MINISTER MODI தூத்துக்குடி இந்தியா NORTHEAST MONSOON மதுரை SEEMAN கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION CSK பாலியல் தொல்லை வன்னியர் அஜித் கள்ளக்காதல் திருப்பரங்குன்றம்