INDIAN 7

Tamil News & polling

இந்தியாவுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம் - பிரதமர் மோடி புகழாரம்!

15 அக்டோபர் 2021 04:31 AM | views : 140
Nature

இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவரும், பாரத ரத்னா நாயகனுமாகிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவரது பிறந்த நாளிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்களும் அப்துல் கலாமின் பிறந்த தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் அன்று அவருக்கு எனது அஞ்சலி. இந்தியாவை வலிமையான, வளமான மற்றும் திறமையானதாக மாற்றுவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் எப்பொழுதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,


मिसाइल मैन के रूप में विख्यात देश के पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर सादर नमन। उन्होंने अपना जीवन भारत को सशक्त, समृद्ध और सामर्थ्यवान बनाने में समर्पित कर दिया। देशवासियों के लिए वे हमेशा प्रेरणास्रोत बने रहेंगे


- Narendra Modi (@narendramodi) October 15, 2021

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்