INDIAN 7

Tamil News & polling

அண்ணாத்தவிற்கு இல்லாத ரூல்ஸ் மாநாடுக்கு மட்டும் ஏன்? சந்தேகமா இருக்கே? கேள்வி கேட்ட கஸ்தூரி!

By E7 Tamil 22 நவம்பர் 2021 03:55 PM
Nature

தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் மாநாடு படம் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு வெளியாகாமல் தள்ளிப்போன படம் ஒருவழியாக நவம்பர் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய கட்டுப்பாடு மாநாடு படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதனால் தங்கள் படத்திற்கு ரசிகர்கள் வருவது குறையும் என்று மாநாடு படக்குழுவினர் கருதுகிறார்கள். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே இது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். அதோடு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று கூறி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில்தான், தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார். கஸ்தூரி செய்துள்ள போஸ்டில், தியேட்டரில் சினிமா பார்க்க திமுக அரசு இரண்டு டோஸ் கொரோனா சான்றிதழ்களை கேட்கிறது. இது நல்ல முன்னெடுப்பு. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நேரம்தான் புதிராக உள்ளது.

எஸ்டிஆர் நடிப்பில் மாநாடு போன்ற பெரிய படம் வரும் போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நேரம்தான் சுவாரசியமாக உள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பே இது போன்ற விதிமுறையை கொண்டு வர அரசுக்கு பெரிய வாய்ப்பு இருந்தது தீபாவளி அன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு கொரோனா வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களை அரசு கொண்டு சென்று இருக்கலாம்.

ஆனால் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை அரசு மிஸ் செய்தது ஏன்? முன்னதாக மாநாடு படமே தீபாவளி அன்று வெளியாகாமல் அண்ணாத்த படத்திற்கு வழி விடும் வகையில் ஒத்திவைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானதையும் இந்த நேரத்தில் கணக்கில் எடுக்க வேண்டும். அண்ணாத்த படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் 50 சதவிகித சீட் கட்டுப்பாடு தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் பீஸ்ட் படம் வெளியாகும் முன் தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளிலும் தளர்வு அறிவிக்கப்படுமா என்று பலர் நினைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகள், கட்சி கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொது போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்த அரசாங்கத்தின் உறுதியை நாம் நிச்சயமாகப் பாராட்டலாம்.

பள்ளிகள், சந்தைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் வேக்சின் போட்டவர்களை எந்நேரமும் கண்காணிப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால் ரேஷன் அல்லது மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் கடைகளுக்கு கடைகளில் எளிதாக வேக்சின் போட்டவர்களை கண்காணிக்க முடியும்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், யுகே, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், சினிமாக்கள், பாடல் விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் நுழைவதற்கு கோவிட் வேக்சின் சான்றிதழ் அவசியம். அதனால் இது தமிழக அரசின் மிகவும் முக்கியமான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும். ஆனால் இந்த விதி எல்லோருக்குமானதா என்பதுதான் கேள்வியே என்று கஸ்தூரி தனது பேஸ்புக் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Image கோவை, கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை

Image சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாயார் வெளிமாநிலத்தில் உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாயார்,

Image சென்னை, சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சத்தியசீலன்-சித்ரா தம்பதியினர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சீட்டுப் பணம் வசூலித்து வந்துள்ளனர். இவர்கள் சமீபத்தில் ‘தீபாவளி சீட்டு’ என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். ஒவ்வொரு



Whatsaap Channel


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு


ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்