INDIAN 7

Tamil News & polling

அண்ணாத்தவிற்கு இல்லாத ரூல்ஸ் மாநாடுக்கு மட்டும் ஏன்? சந்தேகமா இருக்கே? கேள்வி கேட்ட கஸ்தூரி!

22 நவம்பர் 2021 03:55 PM | views : 780
Nature

தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் மாநாடு படம் வெளியாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு வெளியாகாமல் தள்ளிப்போன படம் ஒருவழியாக நவம்பர் 25-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் புதிய கட்டுப்பாடு மாநாடு படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதனால் தங்கள் படத்திற்கு ரசிகர்கள் வருவது குறையும் என்று மாநாடு படக்குழுவினர் கருதுகிறார்கள். மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே இது தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். அதோடு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாக பாதிக்கும் என்று கூறி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில்தான், தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார். கஸ்தூரி செய்துள்ள போஸ்டில், தியேட்டரில் சினிமா பார்க்க திமுக அரசு இரண்டு டோஸ் கொரோனா சான்றிதழ்களை கேட்கிறது. இது நல்ல முன்னெடுப்பு. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நேரம்தான் புதிராக உள்ளது.

எஸ்டிஆர் நடிப்பில் மாநாடு போன்ற பெரிய படம் வரும் போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நேரம்தான் சுவாரசியமாக உள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்பே இது போன்ற விதிமுறையை கொண்டு வர அரசுக்கு பெரிய வாய்ப்பு இருந்தது தீபாவளி அன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு கொரோனா வேக்சின் குறித்த விழிப்புணர்வை மக்களை அரசு கொண்டு சென்று இருக்கலாம்.

ஆனால் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பை அரசு மிஸ் செய்தது ஏன்? முன்னதாக மாநாடு படமே தீபாவளி அன்று வெளியாகாமல் அண்ணாத்த படத்திற்கு வழி விடும் வகையில் ஒத்திவைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானதையும் இந்த நேரத்தில் கணக்கில் எடுக்க வேண்டும். அண்ணாத்த படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் 50 சதவிகித சீட் கட்டுப்பாடு தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேபோல் பீஸ்ட் படம் வெளியாகும் முன் தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளிலும் தளர்வு அறிவிக்கப்படுமா என்று பலர் நினைக்கும் வாய்ப்புகளும் உள்ளன. மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகள், கட்சி கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொது போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்த அரசாங்கத்தின் உறுதியை நாம் நிச்சயமாகப் பாராட்டலாம்.

பள்ளிகள், சந்தைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் வேக்சின் போட்டவர்களை எந்நேரமும் கண்காணிப்பது சாத்தியம் இல்லைதான். ஆனால் ரேஷன் அல்லது மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் கடைகளுக்கு கடைகளில் எளிதாக வேக்சின் போட்டவர்களை கண்காணிக்க முடியும்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், யுகே, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில், சினிமாக்கள், பாடல் விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், பப்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் நுழைவதற்கு கோவிட் வேக்சின் சான்றிதழ் அவசியம். அதனால் இது தமிழக அரசின் மிகவும் முக்கியமான, வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றுதான் கூற வேண்டும். ஆனால் இந்த விதி எல்லோருக்குமானதா என்பதுதான் கேள்வியே என்று கஸ்தூரி தனது பேஸ்புக் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆதி என்ற இளைஞர் கூலிப்படையினரால் கொடூரமான முறையில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை,

Image சென்னை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற

Image சென்னை, சென்னை வடபழனியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்னர் மாணவி தனது வீட்டில் உள்ள மாடி படிக்கட்டில்

Image சென்னை, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு

Image சென்னை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால்

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image சென்னை, சென்னையில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, வணிகம், தொழில் ரீதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து வந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் விழாக்காலங் களிலும்,

Image திமுக அரசு அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு உத்​தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு செய்த மேல்​முறையீட்டை கைவிட வேண்​டும் உள்​ளிட்ட



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்