வாழைமரம் தென்னைமரம் சிறுகதை

வாழைமரம் தென்னைமரம் சிறுகதை

  நவம்பர் 28, 2021 | 01:02 pm  |   views : 1902


வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது,



🌴 ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது.



வாழைக்கன்று தென்னங்கன்றிடம் கேட்டது,



” நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே…??? “



Also read...  ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்


தென்னங்கன்று சொன்னது,


” ஒரு வருஷம் “



“ஒரு வருஷம்னு சொல்றே



ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே…??? எதாச்சும் வியாதியா…???”



கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது



தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது



ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது



இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது



வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது



தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது



வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள்



தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது



தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை



“கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ..???



ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே…..!!!



நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன்



உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது



ஆனா பாரு



நான் மட்டும் எப்படி வளந்துட்டேன்



உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல “



என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது



தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை



இன்னும் சிறிது காலம் சென்றது



அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது



அது பூவும் காய்களுமாக அழகாக மாறியது



அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது



இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது



நல்ல உயரம்



பிளவுபடாத அழகிய இலைகள்



கம்பீரமான குலை



வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது



இப்போது காய்கள் முற்றின



ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான்



வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்



வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான்



தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை



இதை விட வேறென்ன பெருமை வேண்டும்…???



வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள்



திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்



முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள



அதன் குலைகளை வெட்டி எடுத்தான்



வாழை மரம் கதறியது



அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது



மரண பயம் வந்துவிட்டது



அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது



ஆம்…



வாழைமரம் வெட்டி சாய்க்கப்பட்டது



ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது



துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது



தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது



அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது



செல்லமே…….



ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல



கவலைப்படாதே



வேகமாக வளர்வதெல்லாம் வேகமாகவே காணாமல் போகும்



புன்னகை செய்



” ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது”



பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் 🌴


Tags :

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது!

2024-05-07 12:11:44 - 1 day ago

கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. புது வகையான காய்ச்சல் எல்லாமே கேரளாவில்தான் தொடங்குகிறது! கேரளாவில் மேற்கு நைல் காய்ச்சல் (வெஸ்ட் நைல் காய்ச்சல்) பரவத் தொடங்கியிருக்கிறது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக


ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை

2024-05-07 06:37:01 - 1 day ago

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நாங்குனேரி எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. சாத்தான்குளம் தனியார் கல்லூரியில் ரூபி மனோகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நெல்லை திசையன்விளை அருகே உள்ள தமது வீட்டின் அருகே ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக


ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

2024-05-07 04:36:06 - 1 day ago

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த


இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம்

2024-05-06 13:03:36 - 2 days ago

இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல - ம.பி உயர்நீதிமன்றம் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் “மனைவியுடன் ஆண் கொள்ளும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவென்பது, பாலியல் வன்கொடுமை அல்ல” என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இது திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மீண்டுமொருமுறை அனைவரையும் பேசவைத்துள்ளது. தன் தீர்ப்பில் நீதிமன்றம், ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் திருமண உறவில் நடக்கும் இத்தகைய விஷயங்கள், பாலியல் வன்கொடுமை


நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன்

2024-05-06 12:58:30 - 2 days ago

நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தற்போது விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.


காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை!

2024-05-06 05:12:05 - 2 days ago

காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை! காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு


பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

2024-05-06 04:58:04 - 2 days ago

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி

2024-05-06 04:57:12 - 2 days ago

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் தேர்வு முடிவுகளை வெளியிடுவார்.