தேவர் குருபூஜை | ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி?! என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி?

By Admin | Published in செய்திகள் at அக்டோபர் 11, 2022 செவ்வாய் || views : 233

தேவர் குருபூஜை | ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி?! என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி?

தேவர் குருபூஜை | ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி?! என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி?

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலை அமைந்துள்ள இடத்தில் ஒவ்வொரு வருடமும் குருபூஜை விழா நடைபெறும். ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும் கொண்டவராக விளங்கிய முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீது அவர் அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டு இருந்தார்.

சுபாஷ் சந்திரபோசுடன் சேர்ந்து நாட்டின் நலனுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார். குறிப்பாக ஆங்கிலேயர்களின் வாய் பூட்டு சட்டம் உள்ளிட்டவற்றால் பல இன்னல்களை சந்தித்த முத்துராமலிங்க தேவர், கடந்த 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 (அவருடைய பிறந்த நாளும் அதே) மறைந்தார். இந்த நாளை அவரது ஜெயந்தி விழாவாகவு, குருபூஜை தினமாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கிலோ எடை உள்ள தங்க கவசத்தை வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் குருபூஜையின் போது, இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் இருந்து பெறப்படும். குறு பூஜை முடிந்தபின் வங்கி பெட்டகத்தில் கொடுத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பக்கமும், தான் தான் பொருளாளர் என்று ஓபிஎஸ் ஒரு பக்கமும் தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி உள்ளனர்.

இதற்கிடையே ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு செய்தது போல மாவட்ட நிர்வாகத்திடமே தேவரின் தங்க கவசத்தை ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் பங்கேற்க பிரதமர் மோதி வரும் ஆக்டபர் 30ம் தேதி தமிழகம் வர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. யார் அதிமுகவை கைப்பற்றுவது என்று ஓபிஎஸ்-இபிஎஸ்.,க்கு இடையே நடக்கும் உள்கட்சி பூசலில், பிரதமரின் தமிழக பயணம் புதிய திருப்பமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் பக்கமே பாஜக ஆதரவு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் ஒன்றாக தேவரின் குரு பூஜையில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

NARENDRA MODI தேவர் குருபூஜை PASUMPON முத்துராமலிங்கத்தேவர் பசும்பொன் MUTHURAMALINGA DEVAR
Whatsaap Channel
விடுகதை :

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?


விடுகதை :

ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?


விடுகதை :

உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு


கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்

கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்


செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next