டி20 உலககோப்பை - சிறந்த அணியை வெளியிட்டது ஐசிசி
நவம்பர் 14, 2022 | 02:11 pm | views : 1877
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களை ஐசிசி Most Valuable Team என்ற பெஸ்ட் 11 என்ற அணியை தேர்வு செய்துள்ளது.
இதில் ஆறு நாடுகளைச் சேர்ந்த 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி யின் இந்த சிறந்த அணியின் கேப்டனாக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1.அலெக்ஸ் ஹெல்ஸ் Eng
Also read... நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
2.ஜாஸ் பட்லர் ( C/W) Eng
3.விராட் கோலி Ind
4.சூரியகுமார் யாதவ் Ind
5.கிளன் பிலிப்ஸ் NZ
6.சிக்கந்தர் ராசா ZIM
7.சதாப்கான் (All Rounder) PAK
8.சாம் கரன் (All Rounder) PAK
9.நோக்கியா SA
10.மார்க் வுட் Eng
11.ஷாகின் ஷா ஆப்ரிடி PAK
12.ஹர்திக் பாண்டியா Ind
ஐசிசி யின் இந்த பெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் ஹெல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நடப்பு டி20 உலக கோப்பையில் 212 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஜாஸ் பட்லர் மற்றொரு தொடக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும். அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நடந்து முடிந்த தொடரில் 225 ரன்கள் அடித்திருக்கிறார்.
நடுவரிசை மூன்றாவது வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சேர்க்கப்பட்டிருக்கிறார். விராட் கோலி இந்த தொடரில் அதிகபட்சமாக 296 ரன்கள் அடித்திருக்கிறார்.
நான்காவது வீரராக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நடந்து முடிந்த தொடரில் அவர் 239 ரன்கள் விளாசி இருக்கிறார்.
ஐந்தாவது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கிளன் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் 201 ரன்கள் அடித்திருக்கிறார்.
ஆல் ரவுண்டர்கள் நடு வரிசையில் ஆறாவது வீரராக சிக்கந்தர் ராசாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வே சேர்ந்த அவர் நடந்து முடிந்த தொடரில் 219 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
ஏழாவது வீரராக பாகிஸ்தானை சேர்ந்த சதாப்கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 98 ரன்களும், பந்துவீச்சில் 11 ரன்களும் அடித்திருக்கிறார்.
ஆல் ரவுண்டராக சாம் கரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்பதாவது வீரராக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
10வது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் மார்க் வுட், இந்த தொடரில் 9 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.11 ஆவது வீரராக ஷாகின் ஷா ஆப்ரிடி சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் 11 விக்கெட் வீழ்த்திருக்கிறார்.
இந்த அணியின் 12 ஆவது வீரராக இந்தியாவின் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் பேட்டிங்கில் 128 ரன்களும் பந்து வீச்சில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'
பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த
கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை
தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என
தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்
மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,