புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்ற 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் பொழுது காற்றின் வேகத்தின் காரணமாக விழும், மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வார்டிலும் அவசர கால தேவைக்காக ஒரு சிறிய இலகுரக வாகனம் மற்றும் 10 பணியாளர்களை தயார்நிலையில் வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் மரங்களின் அருகாமையில் நிற்பதையோ அல்லது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களின் கீழ் நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அவசர உதவி, மற்றும் புகார்களை தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின்போது மரம் மற்றும் மரக் கிளைகள் சாய்ந்து விழக்கூடிய அபாயம் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்து. இதையடுத்து, மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிளமேடு, தேவநேரி, வெண்புருஷம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள், தங்கள் படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்றனர். மாமல்லபுரம் மற்றும் தேவநேரி பகுதியில் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடமில்லை என மீனவர்கள் கூறியுள்ளனர். எனவே, பேரிடர் காலங்களில் மீன்பிடி படகுகளை நிறுத்துவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!