POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

மனைவியுடன் தகாத உறவில் இருந்த நண்பனை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்!

3 years ago 16 டிசம்பர் 2022 07:50 AM | views : 233
மதுரையில் 4 மாதங்களுக்கு முன்பு மாயமான இளைஞர் கிணற்றில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பெர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி பெரியசாமி  சிறைக்கு சென்றார். இந்நிலையில் மதுரை திருவாதவூர் முக்கம்பட்டியை சேர்ந்த அவருடைய நண்பர் தமிழரசன் என்பவர் பெரியசாமியை ஜாமீனில் எடுக்க வள்ளிக்கு முயன்றுள்ளார்.

இதுதொடர்பாக தமிழரசன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற நிலையில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  பெரியசாமி சிறையில் இருந்த நிலையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெரியசாமி சிறையில் இருந்து ஜாமீனில் வந்துள்ளார்.  நண்பர்கள் மூலம் தமிழரசன் - வள்ளியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. துரோகம் செய்த நண்பனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பெரியசாமி தனது நண்பர்களுடன் சதி திட்டம் தீட்டியுள்ளார்.


இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று மதுரை அப்பன் திருப்பதி அருகே குருத்தூர் என்ற கிராமத்திற்கு மது குடிக்க தமிழரசனை பெரியசாமி அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பர்களான ஒத்தக்கடை கொக்குளம் பகுதியை சேர்ந்த அக்கினி, ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்த நவீன், அழகேஷ், குணாளன், அழகர் ஆகியோரை அழைத்து சென்றுள்ளார்.

மதுபோதையில் இருந்த தமிழரசனை பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். தமிழரசனின் உடலை ஏற்கனவே திருடி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் கயிறு மற்றும் துணிகளால் சுற்றில் கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

இந்த விவகாரம்  ஏதுவும் தெரியாத தமிழரசன் குடும்பத்தினர் அவரை காணவில்லை என கடந்த செப்டம்பரில் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தமிழரசனை தேடி வந்துள்ளனர். இதனிடையே மற்றொரு திருட்டு வழக்கில் பெரியசாமி மற்றும் அவனது நண்பன் அக்கினி ஆகிய இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இந்த சூழலில் பெரியசாமியின் நண்பனான நவீன் என்பவர் மதுபோதையில் தமிழரசன் கொலை  செய்த விவகாரம் குறித்து நண்பர்களிடம் உளறியுள்ளார். இந்த தகவலை மோப்பம் பிடித்த  மதுரை போலீஸார் உடனடியாக நவீனை பிடித்து தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர்.  போலீசார் விசாரணையில் மதுபோதையில் இருந்த தமிழரசனை கொன்று உடலை கிணற்றில் வீசியதை ஓப்புக்கொண்டார்.


இதனையடுத்து குருத்தூர் பகுதிக்கு அழைத்து சென்று அவர் சொன்ன கிணற்றில் போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது முற்றிலும் அழுகிய நிலையில் தமிழரசனின் உடல் கிடைத்தது. அதனை மீட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

தமிழரசனை கொலை செய்த வழக்கில் பெரியசாமியின் நண்பர்களான நவீன், அழகேஷ், குணாளன் ஆகிய மூன்று பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில்  தலைமறைவான அழகர் என்பவரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK திமுக விஜய் அதிமுக VIJAY சென்னை பாஜக CHENNAI அண்ணாமலை BJP ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் AIADMK PMK TTV DHINAKARAN பாமக காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் உதயநிதி ஸ்டாலின் கனமழை திருமாவளவன் இந்திய அணி கோவை CONGRESS தமிழகம் சீமான் COIMBATORE கைது ரஜினிகாந்த் சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி அமமுக கொலை PARLIAMENT ELECTION KEERTHY SURESH UDHAYANIDHI STALIN THIRUMAVALAVAN தேவர் வன்னியர் OPS INDIAN CRICKET TEAM கொரோனா தென்காசி மதுரை TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை சூர்யா தமிழ்நாடு AJITH SURIYA நெல்லை ஓபிஎஸ் NELLAI பாலியல் தொல்லை அன்புமணி மோடி BIGG BOSS TAMIL ELECTION COMMISSION விடுமுறை CSK ASSEMBLY ELECTIONS கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் அஜித் திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி