துணிவு பேனரை விட்டுட்டு வாரிசு பேனருக்கு தடையா? - கோபத்தில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்!

டிசம்பர் 25, 2022 | 12:25 pm | views : 1690
விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு படங்களின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படத்தின் பேனர் பெரிதாக இருக்கிறது என ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்றில் வாரிசு பட பேனரை மூடி மறைக்கப்பட்டிருக்கும் போட்டோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். மற்றொருபக்கம் அஜித் ரசிகர்கள் அதனை உற்சாகமாக பதிவிட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரையரங்கம் ட்விட்டரில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேவையில்லாத மோதலை தடுக்கவே பேனர் கவரால் மூடப்பட்டது. தற்போது ஸ்பெஷல் ஷோ முடிந்த பிறகு பேனரை மூடிய கவரை நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Also read... பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
இதனையடுத்து விஜய் பட ஸ்பெஷல் ஷோ திரையிடும்போது துணிவு பேனர் மறைக்கப்படுமா என கேள்வி எழுப்பிவருகின்றனர். இரு படங்களின் வெளியீட்டுக்கு இன்னும் 20 நாட்களுக்கு குறைவாகவே உள்ள நிலையில் விஜய் - அஜித் ரசிகர்களின் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. படம் வெளியாகும் நாளில் திரையரங்குகளில் கலவரங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
![]() |
![]() |
![]() |
![]() |
ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும்,
தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது;
2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்
முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?
தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன?
மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்..
நான் பேட்டி எடுத்த பல
பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!
அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்
9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை :
சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்
திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!
ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !..
உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.
பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு