குரூப் 4 முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 4 முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  டிசம்பர் 30, 2022 | 09:41 am  |   views : 1752


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டித் தேர்வு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. அதனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.



டிஎன்பிஎஸ்சி-யில் குரூப் 4 தேர்வு அதிகப்படியான பணியிடங்களைக் கொண்டு அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியத் தகுந்த பணியாளர்களை இத்தேர்வின் மூலம் தேர்வு செய்வர். ஒரு நிலை தேர்வு மட்டும் கொண்டு தேர்வு செய்யப்படுவதால் இப்பணிக்கு பெரும்பாலானோர் விண்ணப்பிப்பர். 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 30.03.2022 ஆம் நாள் 7,301 பணியிடங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.



அதனைத்தொடர்ந்து, ஜூலை மாதம் 24 ஆம் நாள் இப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 18 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இப்பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.



ஆனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்ற தீர்ப்பு முடிவுகள் வெளியிடுவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது. நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.



Also read...  முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?


முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆக தேர்வர்கள் சிரமம் அடையத் தொடங்கினர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில் குரூப் 4 பணியிடங்கள் குறிப்பிடப்படாமல் தேர்வு 2024 ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. 2023 ஆம் ஆண்டு அட்டவணையில் குறைந்த அளவிலேயே பணியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை மேலும் தேர்வர்கள் மற்றும் தேர்வுக்குத் தயார் ஆகுபவர்களை அதிருப்தி அடையச் செய்தது.



அந்த நிலையில், தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி முடிவுகள் தாமதம் ஆவது மற்றும் அட்டவணை குறித்த விளக்கத்தை அளித்தனர். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைத் தவிர இதர தேர்வாணையத்தில் மூலமாகவும் தகுதியானவர்களை அரசுப் பணியில் நியமனம் செய்வதாகவும், முடிவுகள் விரைந்து வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.



இதனிடையே, குரூப் 4 முடிவுகள் டிசம்பரில் வெளியாகாது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 ஆம் பணியிடங்களில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் அதிகரிப்பதாகத் தெரிவித்தனர். இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 9,801 ஆக உயர்ந்தது.




தற்போது டிசம்பர் 29 ஆம் நாள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் 2022 ஆம் ஆண்டு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.





ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..!

2023-09-09 02:35:20 - 2 weeks ago

ஊழல் குற்றச்சாட்டில் சந்திரபாபு நாயுடு கைது..! ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது; 2019- ல் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ரூ.317 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், நந்தியாலா போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்


முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன?

2023-09-21 04:25:08 - 2 days ago

முத்துராமலிங்கத் தேவர், அண்ணாதுரை மோதல்.. நடந்தது என்ன? தேவர், அண்ணாதுரை... நடந்தது என்ன? மதுரையில் கடவுளை பற்றி அண்ணாதுரை பேசியதும், அதற்கு தேவரின் எச்சரிக்கையும் தமிழக அரசியலில் மிக முக்கியமான வரலாறு.. இந்த செய்தியை பற்றி பல்வேறு கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இந்த வரலாறை பற்றி பேசிய அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.. நான் பேட்டி எடுத்த பல


பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை!

2023-09-20 14:27:50 - 2 days ago

பெரியார் மணியம்மை திருமணம் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை! அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம் 9.7.1949ல் நடந்த பெரியார் - மணியம்மை திருமணத்தை கண்டித்து “ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதிய கட்டுரை : சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர்


திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை!

2023-09-20 16:42:13 - 2 days ago

திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் கட்டிய ஆண்டிகள் கதை! ஆண்டிகள் கூடிமடம் கட்டிய கதை என்று கிண்டலாக கூறுவார்கள் ஆனால் !.. உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு