குரூப் 4 முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 4 முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  டிசம்பர் 30, 2022 | 09:41 am  |   views : 1932


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டித் தேர்வு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. அதனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.



டிஎன்பிஎஸ்சி-யில் குரூப் 4 தேர்வு அதிகப்படியான பணியிடங்களைக் கொண்டு அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் அரசின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியத் தகுந்த பணியாளர்களை இத்தேர்வின் மூலம் தேர்வு செய்வர். ஒரு நிலை தேர்வு மட்டும் கொண்டு தேர்வு செய்யப்படுவதால் இப்பணிக்கு பெரும்பாலானோர் விண்ணப்பிப்பர். 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 30.03.2022 ஆம் நாள் 7,301 பணியிடங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.



அதனைத்தொடர்ந்து, ஜூலை மாதம் 24 ஆம் நாள் இப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 18 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். இப்பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தது.



ஆனால் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்த நீதிமன்ற தீர்ப்பு முடிவுகள் வெளியிடுவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தியது. நவம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.



Also read...  குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!


முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆக தேர்வர்கள் சிரமம் அடையத் தொடங்கினர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதில் குரூப் 4 பணியிடங்கள் குறிப்பிடப்படாமல் தேர்வு 2024 ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டு இருந்தது. 2023 ஆம் ஆண்டு அட்டவணையில் குறைந்த அளவிலேயே பணியிடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை மேலும் தேர்வர்கள் மற்றும் தேர்வுக்குத் தயார் ஆகுபவர்களை அதிருப்தி அடையச் செய்தது.



அந்த நிலையில், தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி முடிவுகள் தாமதம் ஆவது மற்றும் அட்டவணை குறித்த விளக்கத்தை அளித்தனர். அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைத் தவிர இதர தேர்வாணையத்தில் மூலமாகவும் தகுதியானவர்களை அரசுப் பணியில் நியமனம் செய்வதாகவும், முடிவுகள் விரைந்து வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.



இதனிடையே, குரூப் 4 முடிவுகள் டிசம்பரில் வெளியாகாது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 ஆம் பணியிடங்களில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் அதிகரிப்பதாகத் தெரிவித்தனர். இதனால் பணியிடங்களின் எண்ணிக்கை 9,801 ஆக உயர்ந்தது.




தற்போது டிசம்பர் 29 ஆம் நாள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான திட்ட அட்டவணையில் 2022 ஆம் ஆண்டு 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.





குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

2023-12-09 15:26:30 - 6 hours ago

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு! மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.


கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

2023-12-09 15:17:51 - 6 hours ago

கட்டணமின்றி ஆவணங்களை மீண்டும் பெற சிறப்பு முகாம்கள் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த