நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலியாக இருந்த மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானோம். என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுக்க வைத்தனர். மேலும் நாங்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினர். இதற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பை பதிவு செய்தபோது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினர் என பதிவிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் நடிகர் சித்தார்த்தின் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வெளியாகின. இதன் ஒரு பகுதியாக நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் புகார் அளித்துள்ளார். அதில், ''மொழி பிரச்னையைத் தூண்டும் விதமாக சித்தார்த் செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போல் சித்தார்த்தையும் அவரின் குடும்பத்தினரையும் 2 ஆண்டுகளுக்கு விமானப்பயணத்தை தடைவிதிக்க வேண்டும் என்று பாஜக ஓபிசி பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி, மத்திய விமான போக்குவரத்துத்துறை இணைய அமைச்சர் வி.கே.சிங்கிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் சித்தார்த்தின் குற்றச்சாட்டுக்கு மதுரை விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்தார். அதில், நடிகர் சித்தார்த் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.
அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சோதனை கூடத்திற்கு வந்துபோது மாலை 4.15 மணி இருக்கும். சோதனை பகுதிக்கு வந்த அவரிடம் முகக் கவசத்தை விலக்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அவருடைய குடும்பத்தினரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. இது வழக்கமான நடைமுறைதான்.
நடிகர் சித்தார்த் சோதிக்கப்பட்டபோது பாதுகாப்பு படை பெண் வீரர் தான் பணியில் இருந்தார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். சித்தார்த்தின் குடும்பத்தினரின் உடைமைகளை அடிக்கடி சோதனை செய்ததால், அவரும் அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணிடம் கோபத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் அந்த பெண் எந்த தயக்கமுமின்றி அமைதியாக அவர்களுக்கு தமிழில் பதிலளித்தார். இந்தியில் பேசவில்லை. அவரது குடும்பத்தினர் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு நடிகர் சித்தார்த் வந்ததிலிருந்து அவர் விமானத்தில் புறப்பட்டு செல்லும் வரையிலான அனைத்து காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி
இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி
இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!
பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்
300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!
முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!