கமல் ஹாசனுக்கு மீண்டும் ஜோடியாகும் த்ரிஷா?
ஜனவரி 02, 2023 | 01:45 pm | views : 1910
மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தனது 234-வது படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளியானது. இரண்டு லெஜெண்டுகள் மீண்டும் இணையும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'KH 234' என்று பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர் இருவரும் தங்களது முந்தைய கமிட்மென்ட்களில் பிஸியாக இருப்பதால் 'KH 234' படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதாமாகும். இதற்கிடையில், நடிகர்கள் மற்றும் குழுவினரை இறுதி செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
Also read... கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
'கேஎச் 234' படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால் 'மன்மதன் அம்பு' மற்றும் 'தூங்காவனம்' ஆகியப் படங்களுக்குப் பிறகு கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் த்ரிஷா நடிப்பதாகக் கூறப்படுவதால், த்ரிஷாவின் கெரியர் மீண்டும் உயரத்துக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையே கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படம் 2023 ஆயுதபூஜைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கமல்ஹாசன் இணையவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், மணிரத்னம் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இறுதி வேலைகளில் பிஸியாக இருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம், ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை
வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து
நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!
அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!
நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய
கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!
கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,
குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்
பிரபல நடிகருடன் ஓரினசேர்க்கையில் இருந்த தனுஷ்..?
தமிழ் திரைத்துறையில் மெல்லிய குரல் கொண்ட பாடகிகளுக்கு மத்தியில் தனது தனித்துவமான குரலால் சிறந்த பின்னணி பாடகி ஆகும் முத்திரை பதித்தவர் பாடகி சுசித்ரா. 2002 க்கு பின் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்களை இழுத்த சுசித்ராவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தன. மன்மதன், வல்லவன், போக்கிரி போன்ற படங்களில் அவர் பாடிய
கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.