இணையத்தை கலக்கும் விக்ரம் பிரபுவின் ரெய்டு பட பாடல்
ஜனவரி 07, 2023 | 12:43 pm | Views : 25
நடிகர் சிவாஜியின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என பெரிய அடையாளங்களுடன் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கினார் விக்ரம் பிரபு. அதற்கேற்ப அவரது நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான கும்கி படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. விக்ரம் பிரபு திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கும்கி, வெள்ளைக்காரத்துரை போன்ற சில படங்களைத் தவிர அவர் நடித்த பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டாணாக்காரன் படம் விக்ரம் பிரபுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுதந்தது. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் சாதனை படைத்தது.
டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் என்பதால் ரெய்டு படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரெய்டு படத்தை கார்த்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இந்தப் படம் சிவராஜ்குமார் நடித்துள்ள தகரு என்ற கன்னட திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. கொம்பன், விருமன் படங்களின் இயக்குநர் முத்தையா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
ரெய்டு படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்காரத்துரை படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு - ஸ்ரீ திவ்யா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து என்ட மாட்டாத என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை சிவம் பாடியுள்ளார்.
Keywords:
VIKRAM PRABHU RAID SRIDIVYA SAM CS விக்ரம் பிரபு ரெய்டு ஸ்ரீ திவ்யா சாம் சிஎஸ் எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
விடுகதை : உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
விடுகதை : அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
விடுகதை : பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
2024-07-25 03:11:28 - 2 days ago
கடந்த 2020-ம் ஆண்டு முதன்மை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களை போன்று நடத்தியதாக தயாநிதி மாறன் பேசியிருந்தார்.
இதையடுத்து தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தயாநிதி மாறன் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மீது
2024-07-22 03:40:09 - 5 days ago
பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அறவழியில் போராட்டம் நடத்திய,
2024-07-22 01:51:11 - 5 days ago
கடலூர்,கடலூரில் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சினிமா படங்களில் 2-ம் பாகம் தோல்வியடைவது குறித்து கருத்து கேட்கிறீர்கள். மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அந்த படங்கள் தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டும் ஏன்? 2 ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. கடந்த அரசும்,
2024-07-22 01:48:42 - 5 days ago
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார்.
2024-07-16 11:19:19 - 1 week ago
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென் நெற்குணம் கிராமத்தில் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த ஏழு வயது மற்றும் ஒன்பது வயது சிறுமிகளை கடந்த 2017
2024-07-16 09:44:26 - 1 week ago
குஜராத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.
1950-ம் ஆண்டுகளில் அறிமுகமான அந்த
2024-07-16 08:52:54 - 1 week ago
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
2024-07-16 08:00:54 - 1 week ago
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாதம் ஒரு முறை மின் கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரை பயனடையலாம் என்றும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக,