விஜய் நடிப்பில் லோகேஷ் கனராஜ் இயக்கும் புதிய படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இது தொடர்பான அறிக்கையில், மாஸ்டர், வாரிசு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜயுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் விஜயின் மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் தகவலையும் வெளியிட்டுள்ளனர். ஜனவரி 2ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியதாகவும், வரும் நாட்களில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் தகவலும், ப்ரோமோ வீடியோ வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் சிறிது காலம் ஒதுங்கி இருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி 67 என தற்போது பெயரிட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் நடிகர் விஜயின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!