ஆசிரியர்கள் கவனக்குறைவால் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

ஆசிரியர்கள் கவனக்குறைவால் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு - ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

  பிப்ரவரி 15, 2023 | 01:59 pm  |   views : 1894


புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள் ஆற்றில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து இறந்த மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு குவிந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இவ்விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்தவர்கள் 7 ஆம் வகுப்பு மாணவி ஷோபியா, 8 ஆம் வகுப்பு மாணவி தமிழரசி, ஆறாம் வகுப்பு மாணவிகள் லாவன்யா, இனியா ஆகிய நான்கு மாணவிகள். இவர்கள் உட்பட 13 மாணவிகளை நேற்று மதியம் 3 மணிக்கு அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இப்ராஹிம் மற்றும் ஆசிரியர் திலகவதி ஆகியோர், திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.



நேற்று இரவு அந்த கல்லூரி வளாகத்தில் தங்கிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், இன்று அருகே உள்ள கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி ஆற்றின் அணைக்கட்டு பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது ஒரு மாணவி தண்ணீரில் இறங்கிய போது எதிர்பாராவிதமாக அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதைப்பார்த்த சக மாணவிகள் மூன்று பேர், அந்த மாணவியை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் 7 ஆம் வகுப்பு மாணவி ஷோபியா, 8 ஆம் வகுப்பு மாணவி தமிழரசி, ஆறாம் வகுப்பு மாணவிகள் லாவன்யா, இனியா ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.



இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் ஆத்திரத்தில் பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறி அழுதக் காட்சி காண்போரை கலங்கச் செய்தது. இதில் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



Also read...  வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்ற விவரம் குறித்து பள்ளியில் இருந்த பிற ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களோடு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அங்கு இலுப்பூர் டிஎஸ்பி காயத்திரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



தொட்டியத்தில் உள்ள கல்லூரிக்கு மாணவிகளை விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துச் சென்ற ஆசிரியர்கள், ஏன் கரூர் மாவட்டம் மாயனூர் அணைக்கட்டிற்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால்தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமலிருக்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேரை சஸ்பெண்ட் செய்து தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மற்றொரு பக்கம், இறந்த மாணவிகளின் உடல்களை வாங்க பெற்றோரும் உறவினரும் மறுத்துவருகின்றனர்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது

2024-05-02 10:37:23 - 17 hours ago

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம்,


நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 21 hours ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 3 days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 3 days ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 1 week ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்


நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 1 week ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 1 week ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 1 week ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்