வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 60 தொகுகிகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
எனவே, முதலமைச்சர் நைபியு ரியோ தலைமையில் மீண்டும் NDPP- பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது. இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1963ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால், ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததில்லை. இப்படி இருக்கு 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 பெண்கள் களம் கண்டனர். இதில் திமாபூர்-3 தொகுதியில் ஹேகானி ஜாகாலூ என்ற பெண் பாஜக கூட்டணி கட்சியான NDPP சார்பில் வேட்பாளராக களம் கண்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட LJP வேட்பாளரை விட 1,536 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனை இவர் பெற்றுள்ளார்.
47 வயதான ஹேஜானி ஜாகாலூ சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், மேட் இன் நாகாலாந்து என இ-காமர்ஸ் தளத்தை தொடங்கி மாநிலத்தின் இளம் தொழிலதிபராக விளங்கி வருகிறார். 2018ஆம் ஆண்டில் இவருக்கு நாட்டின் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இருந்து இந்த விருதை பெற்ற முதல் நபர் இவர். NDPP கட்சியின் மற்றொரு பெண் வேட்பாளரான சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் (Salhoutuonuo Kruse) தான் போட்டியிட்ட மேற்கு அங்காமி தற்போது முன்னிலையில் உள்ளார். இவரும் வெற்றி பெறும் பட்சத்தில் நாகாலாந்து சட்டப்பேரவைக்குள் இரு பெண் எம்எல்ஏக்கள் முதல் முறையாக நுழைவார்கள்.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!