வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 60 தொகுகிகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
எனவே, முதலமைச்சர் நைபியு ரியோ தலைமையில் மீண்டும் NDPP- பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது. இந்நிலையில், நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1963ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால், ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததில்லை. இப்படி இருக்கு 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் 4 பெண்கள் களம் கண்டனர். இதில் திமாபூர்-3 தொகுதியில் ஹேகானி ஜாகாலூ என்ற பெண் பாஜக கூட்டணி கட்சியான NDPP சார்பில் வேட்பாளராக களம் கண்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட LJP வேட்பாளரை விட 1,536 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனை இவர் பெற்றுள்ளார்.
47 வயதான ஹேஜானி ஜாகாலூ சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், மேட் இன் நாகாலாந்து என இ-காமர்ஸ் தளத்தை தொடங்கி மாநிலத்தின் இளம் தொழிலதிபராக விளங்கி வருகிறார். 2018ஆம் ஆண்டில் இவருக்கு நாட்டின் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இருந்து இந்த விருதை பெற்ற முதல் நபர் இவர். NDPP கட்சியின் மற்றொரு பெண் வேட்பாளரான சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் (Salhoutuonuo Kruse) தான் போட்டியிட்ட மேற்கு அங்காமி தற்போது முன்னிலையில் உள்ளார். இவரும் வெற்றி பெறும் பட்சத்தில் நாகாலாந்து சட்டப்பேரவைக்குள் இரு பெண் எம்எல்ஏக்கள் முதல் முறையாக நுழைவார்கள்.
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!