சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் BRIDGE கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கல்வி, மருத்துவம், இயற்கை, வானிலை என்று அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துக்கென 1997ம் ஆண்டே தனிக்கொள்கை வகுத்து வெளியிட்டதன் மூலம், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தியதாக புகழாரம் சூட்டினார். இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதனை பின்பற்றி, திராவிட மாடல் அரசு தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக திகழும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், இளம் தலைமுறையினர் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!